tamilnadu

img

“காவிரியில் தண்ணீர் கேட்பது நமது உரிமை”

வேலூர், செப். 15- காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை. அது நம்முடைய உரிமை. உச்ச நீதிமன்றத்தால் அறுதியிட்டு சொல்லப்பட்ட உரிமை என்று தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரை முருகன் கூறியுள்ளார்.  ‘கர்நாடகத்தில் மழை பெய்து ஏராளமாக தண்ணீர் வந்தால் மட்டும் தான் தமிழ் நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க முடியும், குறைவாக தண்ணீர் இருந்தால், தண்ணீர் கொடுக்க  முடியாது’ என்று கர்நாடகம் சொல்ல முடியாது” என்று வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வெள்ளிக்கிழமை (செப்.15) தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- காவிரியில் நாம் தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை. அது நம்முடைய உரிமை. உச்ச நீதிமன்றத்தால் அறுதியிட்டு சொல்லப்பட்ட உரிமை. கர்நாடகா தங்களிடத்தில் தற்போது தண்ணீர் இல்லை என்கிறார்கள். அதற்கு மழை பெய்து ஏராளமாக தண்ணீர் வந்தால் மட்டும் தான், தமிழ கத்துக்கு தண்ணீர் கொடுக்க முடியும், குறைவாக தண்ணீர் இருந்தால், தண்ணீர் கொடுக்க  முடியாது என்று சொல்ல முடி யாது. கையளவு தண்ணீர் இருந் தாலும், அதை எங்களுக்கு பங்கிட்டுத் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள் ளது. ஆனால், கர்நாடகா ஆங்காங்கே அணைகளில் தண்ணீர் நிறுத்தி வைத்துக் கொண்டு கே.ஆர்.எஸ், கபினி அணையில் அதேபோல் மற்ற  அணைகளிலும் நிறுத்தி வைத் துள்ளது. எனவே, கர்நாடகா வில் இருக்கும் தண்ணீரில், எங்களுக்கு உரிய தண்ணீரை தர வேண்டும் என்று தமிழகம்  கர்நாடகாவிடம் கேட்கிறது. தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப் பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவிடம் கேட்டது.

அவர்கள் உடனடி யாக கண்ணை மூடிக் கொண்டு  15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விடுங்கள் என்று கூற மாட்டார்கள். காரணம், அவர்கள் இரண்டு  மாநிலங்களுக்கு பொதுவான வர்கள். கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரின் இருப்பைக் கணக்கிட்டு, 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கனஅடி தண்ணீர் தரலாம் என்று முடிவு செய்து அறிவித்துள்ளார்கள். அதையும் விடமாட்டோம் என்று கர்நாடக அரசு கூறுகிறது. இது உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு சட்ட ஆணையத்தை மீறுவதாகும். இந்தப் போக்கு சரியானது அல்ல. அதற்காக அவர்கள் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுகின்றனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டு வதால், ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. நாமும் கூட்டலாம், அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால், 21  ஆம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசார ணைக்கு வருகிறது. காவிரி விவகாரத்தில் என்ன  நடந்தது என்பதை தமிழ்நாடு அரசின் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி உள்ளிட்டோர் தெரிவிப்பார்கள். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கு கட்டுப்பட வேண்டும். காவிரி வழக்கில், உச்ச நீதி மன்றத்தில் நமக்கு சாதக மாக இல்லை என்றால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை  கூட்டி அடுத்த என்ன செய்வது  என்பது குறித்து யோசிக்க லாம். எனவே, இந்த விவகாரத் தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு எதிர் பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.