விருதுநகர் எல்ஐசி ஊழியர் போராட்டத்தில் அ.சவுந்தரராசன் பேச்சு
விருதுநகர், மே.4- பெரும் லாபத்துடன் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமாக விளங்கி வரு வது எல்.ஐ.சி ஆகும். இந்நிறுவனத்திற்கு நாடு முழுவதும் ரூ.37 லட்சம் கோடிக்கு சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதன் பங்குகளை குறுக்கு வழியில் ஐ.பி.ஓ என்ற பெயரில் விற்பனை செய்திட ஒன்றிய பாஜக அரசு முடிவு செய் துள்ளது. இதனைக் கண்டித்து நாடு முழு வதும் உள்ள எல்.ஐ.சி ஊழியர்கள் 2 மணி நேரம் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்நிலையில், விருதுநகர் கச்சேரி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒட்டு மொத்த மாக வெளிநடப்பு செய்து இப்போராட்டத் தில் கலந்து கொண்டனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக சிஐ டியு மாநிலக்குழு உறுப்பினர்கள் அனை வரும் எல்.ஐ.சி அலுவலக வளாகத்திற்கு வந்தனர். பின்பு, தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். அப்போது, சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசியதாவது: பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை நிறு வனங்களை வேகமாக விற்பனை செய்யும் வேலையை செய்து வருகிறது. முன்பு பிரத மராக வாஜ்பாய் இருந்த போது, பொதுத் துறையை விற்பனை செய்வதற்காகவே தனி இலாகா இருந்தது.
இந்திய நாட்டு சொத்துக்களை கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது எனவும், தனியார் மூலம் தான் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய முடியும் என பாஜக அரசு குருட்டுத்தனமான முடிவு களை அமல்படுத்தி வருகிறது. பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்த காலத்தில், மக்களின் மிச்சப் பணத்தை சேமிப்பாக மாற்றி அந்த பெரும் தொகை யை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வந்தனர். இதற்காக திட்ட கமிசன்கள் இருந் தன. சேமிப்பு பணத்தின் மூலம் அணைக் கட்டுகள், உருக்காலைகள், கல்வி நிலை யங்கள் போன்றவற்றை உருவாக்கினர். ஆனால், பாஜக அரசு அதற்கு மாறாக, பாரத ஸ்டேட் வங்கி, எல்.ஐ.சி போன்றவற்றை தனியாருக்கு விற்க துடிக்கிறது. எல்.ஐ.சி பல மகத்தான சாதனை களை செய்திருக்கிறது. எல்.ஐ.சியின் பணம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதன் லாபத் தொகை 65 சத வீதத்திற்கு மேல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
எல்.ஐ.சி உருவாவதற்கு முன்பு 120க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இருந் தன. அவை மக்களின் பணத்தை வசூலிப்ப வையாகவே இருந்தன. மேலும், பல தனி யார் கம்பெனிகள் மக்களின் பணத்தை கோடிக் கணக்கில் வாரிச் சுருட்டிக் கொண்டு தப்பியோடி விட்டன. இதுகுறித்து பல்வேறு புகார்கள் நிதி அமைசக்கத்திற்கு வந்தன. எல்.ஐ.சி உருவான பின்பு, பொது மக்க ளின் பணம் அனைத்தும் பாதுகாக்கப்பட் டுள்ளது. திரும்ப வழங்கப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்பட்டுள்ளது. பல நேரங்களில் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்க அரசு முடிவு செய்த போது, லாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்களான ஐ.ஓ.சி, எல்.ஐ.சி போன்ற நிறுவனங்கள் அதன் பங்குகளை வாங்கி வந்தன. ஆனால், அதையும் தடுக்க மோடி அரசு சட்டம் கொண்டு வந்துள் ளது. கடந்த 20 ஆண்டுகாலம் எல்.ஐ.சி ஊழி யர் சங்கம் தொடர்ந்து போராடி இந்நிறு வனத்தை பாதுகாத்து வருகிறது. என்ன விலை கொடுத்தாலும், பொதுத்துறை நிறு வனங்களை பாதுகாக்க வேண்டும். ஒரு வருட காலம் கடுமையாக தொடர்ந்து போராடி வெற்றி பெற்ற விவ சாயிகள் போல், நாமும் தொடர்ந்து போராடி மோடி அரசை மண்டியிடச் செய்வோம். இது எல்.ஐ.சி ஊழியர்களின் தனிப்பட்ட போராட்டம் அல்ல. இது ஒரு நாடு சம் பந்தப்பட்ட போராட்டமாகும். எனவே, இந் திய தொழிலாளி வர்க்கம் எல்.ஐ.சி ஊழியர் களின் பக்கம் நிற்கும் எனக் கூறினார். மேலும் இதில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், துணைப் பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் உட்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் அனை வரும் பங்கேற்றனர். முடிவில் எல்.ஐ.சி ஊழியர் சங்கத்தின் பவளவண்ணன் நன்றி கூறினார்.