கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) அரசைப் பாதுகாப்பது இந்த காலத்தின் மிகப்பெரிய கடமை. கேரளாவின் இடதுசாரி மாதிரியை உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்து பரப்ப வேண்டும். கேரள மாதிரியை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. பொய்யை பரப்புபவர்களுக்கு அடி பணியாமல் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார் பினராயி விஜயன். இடதுசாரிகள் எந்த ஊழலிலும் ஈடுபட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அமைந்தது இந்த அரசு. கேரளாவில் சிறு சிறு பிரச்சனைகளைக் கூட பூதாகரமாக்கி, இடதுசாரிகளை வேரோடு பிடுங்கி எறியும் விவாதம் இங்கு நடைபெறுகிறது. சி.பி.எம்., முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தாக்கி, கம்யூனிச எதிர்ப்பு பொது உணர்வை உருவாக்குவதே இதன் நோக்கம். ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்), பாஜக மற்றும் வலதுசாரி ஊடகங்கள் கேரளாவின் இடதுசாரி அடித்தளத்தை அழிக்க முயற்சிக்கின்றன. அரசமைப்புச் சாசனத்தையும், நாடாளுமன்ற அமைப்பையும் மோடி அரசு அழித்து வருகிறது. மோடியின் பிம்பத்தை உயர்த்துவதற்காக நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது. சட்டங்களை உருவாக்குவது ஏகபோகங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமே என்றாகி விட்டது. நாட்டின் செல்வத்தை ஏகபோகங்களுக்கு மாற்றும் இடைத்தர கராக செயல்படுகிறது ஒன்றிய அரசு. இதுகுறித்து விவாதிப்பதை தவிர்க்கவே மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகின்றனர்.