tamilnadu

img

சாத்தான்குளம் போல் மதுரையில் நடக்காது காவல் ஆணையர் உத்தரவாதம்

மதுரை, ஜூலை 5- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் வியாபாரிகள் ஜெயராஜ், பென் னிக்ஸ் காவல்துறையால் சித்ர வதை செய்யப்பட்டு கொல்லப் பட்ட சம்பவம் தமிழகம் முழு வதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதன் பின்னணியில் தமிழக அரசு பல்வேறு நடவ டிக்கைகளை மேற்கொண்டது. அதனொரு பகுதியாக காவல் துறை உயரதிகாரிகளும் மாற்றப் பட்டனர். மதுரை காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வா தம் மாற்றப்பட்டு புதிய ஆணை யராக பிரேம் ஆனந்த் சின்ஹா ஞாயிறன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியா ளர்களை சந்தித்த பிரேம் ஆனந்த் சின்ஹா, மக்களுக்கு சேவை செய்வது தான் முக்கிய நோக்கம். சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற சம்ப வங்களை தடுக்க கூடுதல் கவ னம் செலுத்தப்படும். பொதுமக் கள்-காவல்துறை நல்லுறவு ஏற்படும் வகையில் காவல்துறை யினர் சுமூகமான உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். திருட்டு, வழிப்பறி கொலை குற்றங்களை தடுக்கவும், குற்ற வாளிகளை அடையாளம் காண வும் பொது இடங்களில் மட்டும் சி.சி.டிவி, கேமராக்கள் இருந் தால் போதது. வீடுகளிலும் கண் காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும். இது குற்றவாளிகளை அடையாளம் காண உதவும். சைபர் கிரைம் குற்றங்கள் தடுக்க கூடுதல் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்படும். சாத்தான் குளம் சம்பவம் போல் மதுரை யில் நடக்காமல் இருக்க கஷ்டடி யில் இருக்கும் குற்றவாளிகளிடம் காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென பயிற்சி அளிக்கப்படும். தொடர் பணி காரணமாக காவல்துறைக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் அவ்வப் போது மனநல ஆலோசனை முகாம் நடத்தப்படும் என்றார்.