2016ல் கொல்லப்பட்ட பாலஸ்தீனக் குழந்தைகளின் உடல்களைத் தர இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகிறது. இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்ட இந்தக் குழந்தைகள் அனைவரும் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களாவர். உடல்களைத் தருமாறு பாலஸ்தீனம் தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறது. ஆனால் சர்வதேச சட்டங்கள் எதை யும் மதிக்காமல் உடல்களைத் தரவில்லை என்று இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்திவரும் சர்வதேசக் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க மற்றும் அர்ஜெண்டினாவின் முன்னாள் ஜனாதிபதிகள் டொனால்டு டிரம்ப் மற்றும் மக்ரோன் மக்ரி ஆகிய இருவரும் இணைந்து வெனிசுலா மீது படையெடுக்க எடுத்த முயற்சிகள் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று அர்ஜெண்டி னா அறிவித்துள்ளது. இது தொடர்பாகப் பல்வேறு ரகசிய ஆவணங்கள் வெளியாகியுள்ளன. 2019 ஆம் ஆண்டில் படையெடுப்பு நடத்தி, ஜனாதிபதி நிகோ லஸ் மதுரோவை அகற்றி விட்டு, பொம்மை அரசை நியமிக்க திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.
பிரான்சின் ஜனாதிபதித் தேர்தல் ஏப்ரல் 10 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. கருத்துக் கணிப்புகளின்படி முதல் சுற்றில் தற்போதைய ஜனாதி பதி மக்ரோன் முதலிடத்தைப் பிடிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. முதல் சுற்றில் யாருக்கும் வெற்றி கிடைக்காத நிலை உள்ளதால், இரண்டாவது சுற்றி உறுதியாக நடைபெறும் என்றும் கணிப்பு கூறியுள் ளது. ஆனால் இதுவரையில் போட்டியிடுவது பற்றி மக்ரோன் அறிவிக்கவில்லை.