tamilnadu

img

பொதுத்துறை தனியாருக்கா? தொழிலாளர்கள் கொந்தளிப்பு

மதுரை, மே 24- பொதுத்துறை நிறுவனங்களை தனி யாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மதுரை மாவட்டத்தில்   தே. கல்லுப்பட்டி, மேலூர், திருப்பரங்குன்றம், சமயநல்லூர்,  கோவில்பாப்பாகுடி,  யா. ஒத்தக்கடை,வாடிப்பட்டி, விக்கிரமங்கலம், திருமங்கலம், உசிலம்பட்டி, கீழக்குயில் குடி, நாகமலை புதுக்கோட்டை, ஏபிடி பணி மனை, கப்பலூர் டோல்கேட், மெப்கோ, ஹைடெக், 14 மின்வாரிய அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு சிஐடியு மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன், கட்டு மான சங்க மாவட்டச் செயலாளர் சி.மணி கிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலும்,  மேலூரில் சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் செ.கண்ணன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தாலுகா நிர்வாகி கள் வி.சேகர், மணவாளன் உட்பட 20 பேர் கைது செய்யபட்டனர்.

 மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பொன்.கிருஷ்ணன், வி.பிச்சைராஜன், பி.பொன்ராஜ், செ.ஆஞ்சி, எம்.சௌந்தர், எஸ்.எம்.பாண்டி, எம்.சித்த ரவேல், என்.காளிராஜன், கட்டுமானசங்கம் எம்.அறிவு, சி.பாண்டியன், மின் ஊழியர் மத்திய அமைப்பு தலைவர்  ஏ.வீரணன், செயலாளர் ஆர்.சுரேஷ் குமார், டி.செல்வ ராஜ் , பொறியாளர் சங்கம்  ஜீவானந்தம் ஆகி யோர் உட்பட 350-க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.   தையல் தொழிலாளர் சங்கம் சார்பில் விக்கிரமங்கலத்தில் தையல் தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்  ஏ.முரு கன்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றி யச் செயலாளர்  வி.பி.முருகன், ரத்தினம், பாண்டி உள்ளிட்ட  தையல் தொழிலா ளர்கள்  கலந்துகொண்டனர்.

விருதுநகர்
விருதுநகர் ஆர்.ஆர்.நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு தெற்கு ஒன்றியச் செயலாளர் பி.நேரு தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற 12 பேர் மீது வச்சக்கா ரப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டிஆர்இயு
விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் சோமு தலைமை வகித் தார். சுதர்சன், சிஐடியு மாவட்டத்துணைத் தலைவர் பி.ராமர், பாரதிராஜா, சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.