tamilnadu

img

தமிழக ஆளுநர் முடிவு நியாயமானதா?

இளங்கலை மருத்துவப் படிப்புக ளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மசோ தாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்ததன் மூலம் பாட்னாவைச் சேர்ந்த, இந்திய காவல் பணி யில் இருந்து ஓய்வு பெற்ற உறுப்பினர் ஆன  ஆர்.என்.ரவி,  ஒரு மாநில ஆளுநரின் பங்கு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளார். திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழகத்தி ற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரப் படும் என உறுதியளித்திருந்தது. மே 2021 இல் திமுக அரசுப் பொறுப்பை ஏற்ற பிறகு, மருத்து வச் சேர்க்கையில், குறிப்பாக சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஏழ்மைப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கான சமூக நீதி விஷயத்தில் இந்த நீட் நுழைவுத் தேர்வுக்கு முந்தைய நிலைமை குறித்து ஆய்வு செய்ய  ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலை மையில் ஒரு குழுவை அரசு நியமித்தது. நீட் நுழைவுத் தேர்வானது பணக்காரர்க ளையும், ஏராளமான பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் தேர்வர்களையும் மட்டுமே ஊக்குவிக்கிறது என்றும், அரசுப் பள்ளி களில் படிக்கின்ற, சமூகத்தில் ஏழ்மையான மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள்  இந்த வரம்பிற்கு வெளியே தள்ளப்படுகின்றனர் என்றும் இக்குழு கண்ட றிந்தது. மேலும், நீட் நுழைவுத்தேர்வு என்பது தகுதிக்கான தேர்வாக இருக்க முடியாது என்றும், ஏழ்மைப் பின்னணியில் இருந்து வந்த மாணவர்கள்தான் மாநிலம் முழு வதும் சுகாதாரத் துறையை நடத்துவதற்கு அடித்தளமாக இருப்பதை தமிழக சுகாதா ரத் துறையின் வரலாறு தெளிவாகக் காட்டு கிறது என்றும் அது குறிப்பிட்டது

பாஜக செயலாளரின் மனு தள்ளுபடி

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மாநி லத்தின் அதிகார வரம்பை எதிர்த்து மாநில பாஜக செயலாளர் தாக்கல் செய்த பொது நல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 13, 2021 அன்று தள்ளுபடி செய்தது. செப்டம்பர் 13, 2021 அன்று, தமிழகத் திற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோருகின்ற, தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை (நீட்) மசோதா வை மாநில சட்டமன்றம் நிறைவேற்றியது. நான்கு பிஜேபி எம்எல்ஏக்கள் மசோதா வுக்கு எதிராக வாக்களிக்க அவையில் உட் காராமல் வெளிநடப்புச் செய்தனர் – நுட்ப மாகப் பார்க்கும்போது இந்த மசோதா  அவையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது. பின்னர் இந்த மசோதா, அப்போ தைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. எனினும் இந்தச் சட்டம் அவையினால் நிறைவேற்றப்பட்ட ஐந்து நாட்களுக்குள், ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டார்: அரசமைப்புச் சட்டத்தின் 200ஆவது பிரிவின்படி மசோதா வுக்கு ஒப்புதல் அளிக்கவோ அல்லது 201 ஆவது பிரிவின்படி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மசோதாவை அனுப்பவோ செய்வதற்குப்  பதிலாக, அவர் அதை கிடப் பில் போட்டு வைத்திருந்தார். தாமதம் குறித்து கேட்டபோது, சட்ட வல்லுநர்களு டன் ஆலோசனை நடத்துவதாக பதில் அளிக்கப்பட்டது.

மையத்தின் முகவராக கருதாமல் மாநிலத் தலைவராக...

பிப்ரவரி 1 ஆம் தேதி, மசோதாவை சட்ட சபை சபாநாயகரிடம் திருப்பி அனுப்பிய ஆளுநர், இந்த மசோதாவை அவை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்றும் கோரி யிருந்தார். எதிர்பார்த்தது போலவே அவரது இந்தச் செயல்  அனைத்துத் தரப்பிலிருந்தும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. திமுகவின் முதல் முதலமைச்சராக இருந்த மறைந்த சி.என். அண்ணாதுரை, “ஆட்டுக்கு தாடி எதற்கு? மாநிலத்துக்கு  ஆளு நர் எதற்கு?” என்று கூறியது மிகவும் பிரபல மான ஒரு கருத்தாகும். 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குள், மாநில சுயாட்சி மற்றும் மத்திய-மாநில உறவு கள் பற்றி ஆய்வு செய்ய நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை திமுக அரசு நியமித்தது.  அந்தக் குழு தனது பரிந்துரையில் “மாநில ஆளுநர் தன்னை மையத்தின் முகவராகக் கருதாமல், மாநி லத்தின் அரசியலமைப்புத் தலைவராக தனது பங்கை ஆற்ற வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்திருந்தது. ஆளுநர்  நியமனத்தில் மாநிலங்களின் கருத்து பெறப்பட வேண்டும் எனவும்  கூறியிருந்தது. உச்சநீதிமன்றம், சம்ஷேர் சிங் வழக்கில் (1974) அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின்றியோ அல்லது அமைச் சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோச னைக்கு எதிராகவோ தனிப்பட்ட முறையில் ஆளுநர் செயல்பட அரசியல் சட்டத்தின்படி உரிமையில்லை என்று கூறியது. ஆளுநர் தனது விருப்புரிமையை மந்திரி சபையுடன் இணக்கமாகவே பயன்படுத்துகிறார்.

நீதிபதி கிருஷ்ணய்யர் கருத்து

அந்த வழக்கின் தீர்ப்பில் தனது ஒரு மித்த கருத்தை எழுதிய நீதிபதி கிருஷ்ணய் யர், ஒரு குடியரசுத் தலைவர்/ஆளுநர், சட்டமன்றத்தை கெடுக்கவும், நீதித்துறையை சீர்குலைக்கவும், அமைச்சரவையை ரத்து செய்யவும் இறையாண்மை மிக்கவராக இருக்க முடியாது என்றார். “இந்த அதிகாரங்களை நாம் அரசின் தலைவருக்கு ‘தனிப்பட்ட உரி மை கொண்டவை’ என்று பார்த்தோமெனில், ஏற்கனவே ஏகாதிபத்திய அடிபணிதல் மற்றும் முடியாட்சி என நீண்ட பாரம்பரியம் கொண்ட ஒரு நாட்டில் அத்தகைய முடிவு மிகவும் கவலையளிப்பதாக இருக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மசோதாவை திரும்பப் பெறு வதற்கு ஆளுநர் இரண்டு காரணங்களை கூறி யதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டி ருந்தது. முதலாவதாக, இந்த மசோதா மாண வர்களின், குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில்  நலிந்த மாணவர்களின் நலனுக்கு எதிரானது. மிகச் சிறியதொரு குழு வினரைத் தவிர, மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும், இப்பிரச்சனையை விவாதித்து, ஒருமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றிய போது, அது கிராமப்புற மற்றும் பொரு ளாதாரத்தில் ஏழை மாணவர்களுக்கு எதி ரானது என்று ஆளுநர் எப்படிக் கண்டு பிடித்தார்? ஆயிரக்கணக்கான பெற்றோர் கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்களின் கருத்தை பதிவு செய்த நீதிபதி ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கையின் அடிப்படையி லேயே இந்த மசோதா உருவாக்கப்பட்டி ருந்தது.

சிஎம்சி வழக்கில் நீட் விலக்கு ஆய்வு செய்யப்படவில்லை

இரண்டாவது காரணம், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (வேலூர்) வழக்கில் (2020) சமூக நீதிக் கண்ணோட்டத்தில் நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் விரிவாக ஆராய்ந்து, ஏழை மாணவர்களின் பொரு ளாதாரச் சுரண்டலைத் தடுக்கும் மற்றும் சமூக நீதியை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என உறுதி செய்தது.  தொழில் முறை மருத்துவக் கல்வி அமைப்பில் நிலவும் பல்வேறு முறைகேடுகளை தடுப்பது; பணத் திற்காக இடங்களை விற்பதன் மூலம் இந்த அமைப்பிற்கு ஊறு விளைவித்து, பொரு ளாதார ரீதியான சுரண்டலில் ஈடுபடுவதை தடுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட நீட் தேர்வில் இருந்து சிறு பான்மையினரால் நடத்தப்படும் கல்வி நிறுவ னங்கள் விலக்கு பெற இயலுமா? அவர்க ளது தகுதியும் நலனும் சமமாகப் பாது காக்கப்படுகிறதா? என்பதை மட்டுமே இந்த வழக்கு ஆராய்ந்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவ தற்கான மாநில அரசின் அதிகாரத்தை நீதி மன்றம் இந்த வழக்கில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு மத்திய சட்டம் இருக்கும்போது கூட, மாநில அரசு அதில் திருத்தம் செய்து, அரசமைப்புச் சட்டத்தின் 254(2)வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம். இந்த மசோதா மீது ஆளுநர் தனது தீர்ப்பை வழங்குவார் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை. அவர் கூறிய முதல் கார ணம் அகநிலைப்பட்டது; இங்கு சட்டசபை யின் விருப்பம் மட்டுமே மேலோங்க முடி யும். இரண்டாவது காரணம் விவாதத் திற்குரியது. ஏனென்றால் ஒரு தீர்ப்பு இந்த மசோதா தொடர்பான பிரச்சனை குறித்து முடிவு எதையும் செய்யாத நிலையில் அதை மேற்கோள் காட்ட முடியாது. திமுக அரசு அவசரமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தி ற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டம் ரவியை ஆளுநர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று கோருவது என்பதையும் கூட ஒரு முடிவாக எடுக்கலாம்.

கட்டுரையாளர்: சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் (பிப்ரவரி 5, 2022 ), 
தமிழில்: வீ.பா.கணேசன்