கோவை, சூலூர் தாலுகாவிற்குட்பட்ட இருகூர் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தமிழக முதல்வரின் காலை உணவுத்திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்று மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி பரிமாறி திட்டத்தை துவக்கிவைத்தார்.