tamilnadu

பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு இஸ்ரேல் துரோகம் ஐரோப்பிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பில் ஈரான் குற்றச்சாட்டு

பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு இஸ்ரேல் துரோகம் ஐரோப்பிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பில் ஈரான் குற்றச்சாட்டு 

ஜெனீவா,ஜூன்21-  ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஜெனீவாவில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி வெளியுறவுத் துறை  செயலாளர்கள், ஐரோப்பிய ஒன்றிய வெளி யுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எனினும் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் அரசாங்கம், தனது அணுசக்தி திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் ராஜிய ரீதியிலான பேச்சுவார்த்தை யை நிறுத்தவில்லை. எப்போதும் தயாரா கத்தான் உள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் தொடரும் வரை பேச்சுவார்த்தையை துவங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளது.  இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் செய்த குற்றங்களுக்கு அவர்களை பொறுப்பேற்க வைத்த பிறகு ராஜிய ரீதியிலான பேச்சுவார்த்தையை பரிசீலிக்க ஈரான் தயாராக உள்ளது என்றும் அரக்சி கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் ஜூன் 15 அன்று நடக்க இருந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பே இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தி ராஜிய ரீதியிலான பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு துரோகம் செய்து விட்டது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.