tamilnadu

உலகச் செய்திகள்

2020 ஆம் ஆண்டில் ஈரானின் பயங்கர வாத எதிர்ப்புப் பிரிவின் தலைவராக இருந்த ஜெனரல் காசிம் சுலைமானி கொல்லப்பட்ட தற்கு சர்வதேச சமூகம் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார். இராக், சிரியா மற்றும் லெபனானில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் நாயகனைக் கொலை செய்ய வெள்ளை மாளிகையில் அமர்ந்து கொண்டு உத்தரவிடுகிறார்கள். இப்படிப் பட்ட உலகையா நாம் காண விரும்புகிறோம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

அணு ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் உக்ரைன் தொடர்பான பதற்றம் ஆகியவை பற்றி ரஷ்யா வும், அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தத் திட்ட மிட்டுள்ளன. ஜனவரி 10 ஆம் தேதி இந்தக் கூட்டம்  நடைபெறும். அதன்பிறகு, ஜனவரி 12 ஆம் தேதி யன்று அமெரிக்க ராணுவக்கூட்டணியான நேட்டோ வுடன் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தப் போகிறது. நீண்ட நாட்களாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதை இரு தரப்பும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தன.

கோவிட் 19 உலகம் முழுவதும் ஏற்படுத்திய பாதிப்பையும் மீறி, கம்போடியாவில் உற் பத்தியாகும் மிதிவண்டிகள் உலகம் முழுவதும் ஏற்று மதியாகியுள்ளன. நடப்பாண்டில் ஜனவரி முதல் அக் டோபர் வரையிலான காலகட்டத்தில் மிதிவண்டி உற் பத்தியாளர்கள் 51 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளனர். வியட்நாம் எல்லை நகர மான பாவெட்டில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங் களில் இந்த மிதிவண்டிகள் உருவாக்கப்படுகின்றன.