சென்னை,ஜன.13- தமிழ்நாடு அரசு உருவாக்கிய தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருதுகள், சமூக நீதிக்காக பாடுபட்டு வரும் பெருமக்க ளுக்கு ஆண்டு தோறும் பொங்கல் திருநாளில் வழங்கப்படுகிறது. 2021 ஆண்டுக்கான விருது பெறுவோர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி முன்னாள் நீதிபதி (ஓய்வு) கே. சந்துரு “டாக்டர் அம்பேத்கர்” விருதுக்கும், திராவிட இயக்க ஆய்வாளரும், சிறந்த எழுத்தாளருமான க.திருநாவு க்கரசு “தந்தை பெரியார்” விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டு ள்ளனர். இந்த இருவருக்கும் வாழ்த்து தெரி வித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- அடுத்தடுத்து வரும் எல்லாத் தலை முறைகளும் திராவிட இயக்கம் குறித்து அறிய முற்படும் போது ஆய்வா ளர் க.திருநாவுக்கரசு அவர்களின் படைப்புகளையும், ஆவணத் தொகுப்புகளையும் கற்றுணர்வது இன்றியமையாத் தேவையாகும். காலங்காலமாக சமூக ஒடுக்கு முறையை எதிர்கொண்டு வாழ்ந்து வரும் பட்டியல் பழங்குடியினர், பட்டியல் சாதியினர் சமூகத்தின் வாழ்வுரிமைக்காக கல்லூரியில் பயிலும் காலத்தில் களப் போரா ட்டத்தை முன்னெடுத்த மாணவர் கே. சந்துரு, வழக்கறிஞர் பணியில் சட்டப் போராட்டமாக உயர்த்தி முன்னேறினார். அவரது நேர்மையும், வெளிப்படை அணுகுமுறையும், சார்பற்ற நடுநிலையும் அவரை நீதி நாயகமாக உயர்த்தியது. மாண்பமை நீதிமன்றத்தில் ஏறக் குறைய ஒரு லட்சம் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்து சாதனை படைத்துள்ளார். இவர் வழங்கிய தீர்ப்புகளில் என்றென்றும் சுடர்விட்டு பிரகாசித்து வழிகாட்டும் தீர்ப்புகளும் அடங்கியுள்ளன. தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருதுகள் பொருத்தமான பெருமக்களிடம் சேர்ந்து, பெரு மைக்கும் பெருமை சேர்க்கும் வகை யில் அமைந்துள்ளது. விருது பெறும் இருவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக்கி றது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.