காத்மண்டு, பிப்.21- மே மாதம் 13 ஆம் தேதி நடைபெற விருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கேற்ற விரும்பும் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று நேபாளத்தின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள குறிப்பில், 11 நாட்க ளுக்குள் அரசியல் கட்சிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில் நிர்வாகிகளின் மாதிரி கையெழுத்துக ளும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும், எந்தக் கட்சியும் தேர்தல்களில் பங்கேற்க வேண்டுமென்றால் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற அரசியல் அமைப்பு விதியையும் சுட்டிக்காட்டியுள்ளது. பதிவு செய்வதற்கான விண்ணப் பத்துடன், கட்சியின் அமைப்பு, அறிக்கை, விதிகள், கொடி, தேர்தல் சின்னம், மத்தியக்குழுவில் இடம் பெற்றுள்ள 21 பேர் கொண்ட பட்டியல் மற்றும் கடந்த ஆண்டு வரவு செலவுக்கான தணிக்கை அறிக்கை ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
அதோடு, நாட்டில் உள்ள பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் மத்தியக்குழு இருக்க வேண்டும். நிர்வாகிகள் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டிருப்பது அவசிய மாகும். இதுவரையில் 119 அரசியல் கட்சி கள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளன. 2017 ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் வெறும் 18 கட்சிக ளுக்கு மட்டுமே உள்ளாட்சி அமைப்பு களில் பிரதிநிதித்துவம் கிடைத்தி ருந்தது. 1957 ஆம் ஆண்டிலிருந்து அரசியல் கட்சிகள் பதிவு செய்து கொள் ளும் நடைமுறை இருந்து வருகிறது. நேபாள அரசியல் வரலாற்றில் முதன் முறையாக அமைக்கப்பட்ட அரசியல் கட்சி பிரஜா பரிஷத் ஆகும். 1882 ஆம் ஆண்டில் இக்கட்சி உருவானது. நேபாளி ராஷ்டிரிய காங்கிரஸ் 1946லிலும், நேபாள காங்கிரஸ் 1948லிலும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 1949லிலும் மற்றும் கூர்கா பரிணத் 1950லிலும் உருவாக்கப்பட்டன. 1958 ஆம் ஆண்டில் முதல் பொதுத் தேர்தல் நேபாளத்தில் நடத்தப்பட்டது. அப்போதிருந்து பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் 119 கட்சிகள் இப்போதும் செயல்பட்டு வருகின்றன.