tamilnadu

img

சென்னையில் புரட்சியாளர் சேகுவேரா புதல்விக்கு வரவேற்பு

சென்னை, ஜன.7- புரட்சியாளர் சேகுவேராவின் புதல்வி வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சிபி ஐ(எம்) மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.  சனியன்று காலை தலைமைச் செய லகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  (மார்க்சிஸ்ட்)-யின் மாநிலச் செயலாளர் கே.  பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து புத்  தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக் களைத் தெரிவித்தார். கீழ்க்கண்ட பிரச்சனைகளில் மனுக்  களை முதல்வரிடம் அளித்து நடவடிக்கை  எடுக்க வேண்டுமென வற்புறுத்தினார். இச்  சந்திப்பின் போது முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின் உட னிருந்தார். தமிழக முதல்வருடன் நடந்த சந்  திப்புக்குப் பின் பேசிய கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: பொதுவுடமை இயக்கங்களின் முன் னோடியும், கியூபப் புரட்சியின் வெற்றிக்கு வித்திட்ட தோழர் பிடல் காஸ்ட்ரோ அவர்  களுடன் இணைந்து போராடிய புரட்சி யாளரும், உலகப் புகழ்பெற்ற மார்க்சிய சிந்தனையாளருமாகிய தோழர் சேகுவேரா வின் புதல்வியார் அலெய்டா குவேரா, அவ ரது மகள் பேராசிரியர் ஸ்டெஃபானி ஆகி யோருக்கு சென்னையில் 18.1.2023 அன்று  நடைபெறவுள்ள வரவேற்பு விழாவிற்கு தமிழக முதல்வர் கலந்து கொள்ள வேண்டு மென அழைப்பிதழ் அளித்தோம்.

தோள் சீலை போராட்ட  200 ஆவது ஆண்டு

இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்  உள்ளிட்ட தென் திருவிதாங்கூர் சமஸ்தா னத்தில் வர்ணாசிரம அடிப்படையில் பெண்  கள் மேலாடை அணிவதற்கு தடை கடைப்  பிடிக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற வீரஞ்செறிந்த தோள்சீலைப் போராட்டத்  தின் 200 ஆவது ஆண்டு விழா கன்னியா குமரி மாவட்டம், நாகர்கோவிலில் பிப்ரவரி  மாதம் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு சிறப்பிக்க  வேண்டுமென அழைப்பிதழ் அளிக்கப் பட்டது. 

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. தஞ்சை - கடலூர் மாவட்டங்களில் செயல்  படும் திருஆருரான், ஆரூரான் சர்க்கரை ஆலை  நிர்வாகம் விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன் வலையிலிருந்து விவசாயிகளை   விடுவிக்க தமிழ்நாடு அரசு, வங்கி நிர்வாகங்கள் மற்றும் ஆலை நிர்வாகத்தோடு பேசி தீர்வு காண வேண்டும் என வற்புறுத்தினோம். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தொடர்ந்து தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் விரோ தமாகவும், பழமைவாத சனாதன கருத்துக்களை யும், அரசியல் சாசனத்திற்கும் முரண்பாடாக பேசி  வருவது தொடர்ந்து கொண்டுள்ளார்.  தமிழக ஆளுநராக இருந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிரான முறையில் செயல்பட்டு வருகிறார். புதிய  கல்விக் கொள்கையை அமலாக்குவது, தமிழக  அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுப்பது மறுப்பது, குறிப்பாக, நீட் விலக்கு, ஆன்லைன் ரம்மி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து கிடப்பில் போட்டுள்ளார். மேலும், நாடாளுமன்றத்  தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு பெயரை பயன்படுத்துவது தவறு என பேசியுள்ளது அரசி யல் சாசனத்திற்கு விரோதமானதாகும். ஆளுந ரின் இந்தப் போக்கை எதிர்த்து தமிழகத்தில் பல  அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், ஜனநாயக  இயக்கங்களும் கண்டன குரல் எழுப்பி வரு கின்றன. அது குறித்த  தமிழக மக்களின் கொந்த ளிப்பான எதிர்ப்பு உணர்வுகளை தெரியப்படுத்தி னோம். மேற்கண்ட அனைத்து பிரச்சனை களையும் கேட்டறிந்த தமிழக முதலமைச்சர் இவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுப்ப தாகத் தெரிவித்தார்.