ஹைதராபாத், ஜன.10- சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற வுள்ள ஐந்து மாநிலங்களிலும் பாஜக வைத் தோற்கடிப்பதை உத்தரவாதப் படுத்துவதே எங்கள் பிரதான கடமை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் ஹைதரா பாத்தில் உள்ள சுந்தரய்யா பவனில் ஜனவரி 7-9 தேதிகளில் நடைபெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற பத்திரிகை யாளர் சந்திப்பில் சீத்தாராம் யெச்சூரி இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: சட்டமன்றத் தேர்தல்கள் நடை பெறும் ஐந்து மாநிலங்களிலும் பாஜக விற்கு எதிராக வாக்குகளை ஒருமுகப் படுத்தி, பாஜகவைத் தோல்வியடை யச் செய்வதற்கான முயற்சிகளைத் தொடர்வோம். எங்கள் பிரதான கடமை, பாஜகவை இம்மாநிலங் களில் தோல்வியடையச்செய்ய வேண்டும் என்பதை உத்தரவாதப் படுத்துவதேயாகும்.
பிரதமராகவே இருந்தாலும்...
பாஜக, தேர்தல் ஆதாயங்களுக்காக மக்களை அச்சுறுத்தி மிரட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடும் என்பதால் அதற்கு எதிராக தேர்தல் ஆணையம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணை யத்தைக் கேட்டிருக்கிறோம். தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதி களைக் கறாராக அமல்படுத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் யாராக இருந்தாலும், அது பிரதமராகவே இருந்தாலும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திடவேண்டும். தேர்தல் நடைபெறும் மாநிலங் களில் பெரிய மாநிலங்களில் பாஜக தோல்வியுறுவது நிச்சயம். உத்தர கண்டில் பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி இருந்துவருகிறது. பஞ்சாப்பிலும் நிலைமை அவர்களுக்குச் சாதக மாக இல்லை.
பாஜக, உத்தரப்பிர தேசத்தில் மதவெறியை விசிறி விட்டுக் கொண்டிருப்பதை, சமீபத்தில் ஹரித்வாரில் நடைபெற்ற ‘சாமியார் களின் நாடாளுமன்றத்தில்’ சாமியார் கள் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப் பைக் கக்கும் பேச்சுக்களைக் கக்கிய திலிருந்து நாம் பார்த்தோம். அங்கே பேசி யவர்களில் சிலர் உள்நாட்டுப் போரு க்குத் தயாராகுங்கள் என்று பேசி யதைப் பார்த்தோம். ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதையொட்டி, பாஜக தற்போது தேர்தல் பத்திரங்கள் தேவை என்று மீண்டும் கோரியிருக்கிறது. இதில் வசூலிக்கப்படும் பணத்தில் 80 சதவீதத் திற்கும் மேலாக பாஜக-வின் தேர்தல் பிரச்சாரத்திற்கே பயன்படுத்தப்படும். இதர கட்சிகளின் நலன்களைப் பாது காத்திடும் விதத்தில் தேர்தல் ஆணையம் விழிப்புடன் இருக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படுவதைத் தேர்தல் ஆணையம் உத்தரவாதப் படுத்திட வேண்டும். தேர்தல் நடத்தை விதி களைக் கடைப்பிடிப்பதில் தேர்தல் ஆணையம் மெத்தனமாக இருந்திடக் கூடாது. இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார். கடந்த மூன்று நாட்களாக நடை பெற்ற கட்சியின் மத்தியக்குழு கூட்டத் தில், கேரளாவின் கண்ணூரில் நடை பெறவுள்ள கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட விருக்கும் நகல் தீர்மானம் இறுதிப் படுத்தப்பட்டது என்றும் யெச்சூரி தெரிவித்தார். (ந.நி.)