இராமநாதபுரம், நவ.16- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கண்ணா மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினம் மற்றும் அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் சேர்மன் கே.காந்தி ராஜன் தலைமை தாங்கி னார். தாளாளர் எஸ்.சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஆட்லின்லீமா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பிரபல அணு விஞ்ஞானி ஜெ. டேனியல் செல்லப்பா கலந்து கொண்டார். அவர் செய்தி யாளர்களிடம் பேசியதாவது: பள்ளியில் அறிவியல் தினம் கொண்டாடுவதினால் மாண வர்களின் திறமையை வெளிக் கொண்டு வர முடியும். மாணவர்கள் திறமையாக இருந்தாலும், இது போன்ற நிகழ்ச்சி நடத்துவதனால் அவர்களை ஊக்கப்படுத்த முடியும். இராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வுகாண அறிவியலால் தான் சாத்தியமாகும். குறைந்த தண்ணீரில் நெல்லை விளை விக்க முடியும். மும்பை போன்ற நகரங்களில் உள்ள விதைகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த தண்ணீரில் நெல் விளைச்சல் ஏற்படுத்தினால் லாபம் ஈட்ட முடியும். இது அறிவியலால்தான் சாத்தியமாகும். இது போன்ற கருத்துக்களையும் இளைஞர்களுக்கு மாணவப் பருவத்திலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்தியாவில் அதிகமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு பொரு ளும் மேடின் இந்தியா என வர வேண்டும் என்றால், அதனை அறிவியலால் தான் கொண்டு வர முடியும். எந்த நாட்டிற்கு சென்றாலும் இந்திய பொருட்களே இருக்க வேண்டும். பெண்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் கூட வெளிநாடு களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. திண்டுக்கல் பூட்டு, இந்துஸ்தான் கார் காணாமல் போய்விட்டன. மாணவர்களுக்கு அறிவியலையும் அறிவியல் சார்ந்த கல்வியையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். புதிதாக கண்டுபிடிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட கல்வி அலுவலர் ஜே.ரவி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் கு. காந்தி, அறிவியல் இயக்க ஆசிரியர் டி.நவநீதகிருஷ்ணன், தணிக்கையாளர் பத்மநாபன், ஆலோசகர் எம்.குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கண்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தி னர் செய்தனர். பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் பள்ளியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவர் ஒருவர் புதிய ராக்கெட் செய்து விஞ்ஞானி டேனியல் முன்னிலையில் செய்து காண்பித்தார். ஆசிரியர் எஸ்.துரைபாண்டியன் நன்றி கூறினார்.