tamilnadu

img

மருத்துவமனை பாதுகாப்பு படை அமைக்க வேண்டும்

சென்னை, நவ.15 - மருத்துவமனைகளில் அசம்பா விதங்களை தவிர்க்க மருத்துவமனை பாதுகாப்பு படை என்ற பிரிவை உருவாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வலியுறுத்தி உள்ளார். கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்று நோய் மருத்துவர் பாலாஜி புதனன்று (நவ.13) தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வியாழ னன்று (நவ.14) சந்தித்து நலன் விசாரித் தார். மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதியையும் சந்தித்து பேசி னார். அதன்பின்னர், மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மருத்துவர்கள், செவி லியர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை, மதுரையில் மருத்துவர் கள், ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயிர்  காக்கும் ஊழியர்களுக்கு பாதுகாப்பில் லாதது வருத்தத்திற்குரியது. இது போன்ற தாக்குதல் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால்  அரசு மருத்துவமனைகளை நோக்கி நோயாளிகள் அதிகளவில் வருகின்ற னர். இதற்கு காரணம், மருத்துவ கட்ட மைப்பு மட்டுமின்றி, மருத்துவர்களின் தரமான சிகிச்சையும்தான். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்கும் வகையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழிய ர்கள் இல்லை. ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள் 8 ஆண்டுகளை கடந்தும் நிரந்தரம் செய்ய ப்படாமல் உள்ளனர். மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் நிலை உள்ளது. இதனை மாற்றி நிரந்தர அடிப்படையில் தேவையான அளவிற்கு மருத்துவர், செவிலியர் களை நியமிக்க வேண்டும். மருத்து வர்கள், செவிலியர்களின் கோரிக்கை களை அரசு நிறைவேற்ற வேண்டும். கலைஞர் நூற்றாண்டு மருத்துவ மனையில் கடந்த 14 மாதங்களில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்துள்ளனர். நாள்தோறும் 2 ஆயிரம் புறநோயாளிகள் வருகின்ற னர். பணிச்சுமையால் மருத்துவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். நோயாளிகளோடு சரியாக பேச முடிய வில்லை. காவல்துறை மருத்துவமனை களுக்கு காவல்துறை தொடர்ந்து பாது காப்பு தர முடியாது. எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனை களின் பாதுகாப்பிற்காக, ‘மருத்துவ மனை பாதுகாப்பு படை’ என்ற தனி அமைப்பை உருவாக்க வேண்டும். நோயாளிகளின் குறைகளை கேட்டறிய ஒவ்வொரு மருத்துவமனையிலும் ‘குறைகள் தீர்வு மையம்’ அமைக்க வேண்டும். அதற்கென்று தனி ஊழி யரை நியமனம் செய்ய வேண்டும். இவற்றின் காரணமாக மருத்துவச் சேவையை மேலும் மேம்படுத்த முடி யும். மருத்துவர்கள், செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின்போது கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெ னின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.