சென்னை, ஜூன் 2- வங்கதேச ரயில்வேயை நவீனமயமாக்க ஐசிஎப் எல்எச்பி ரயில் பெட்டிகள் உத வும் என வங்கதேச ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். வங்கதேச ரயில்வே அமைச்சர் முகம்மது நூருல் இஸ்லாம் சுஜன், வங்கதேச ரயில்வே கூடுதல் தலைமை இயக்குநர் சர்தார் சஹாதத் அலி ஆகியோர் வியாழனன்று (ஜூன் 2) ஐசிஎப் ஆலைக்கு வருகை தந்து அங்குள்ள எல்.எச்.பி தயாரிப்புக் கூடத்தை பார்வையிட்டனர். அங்கு தற்போது தயாரிப்பில் உள்ள எல்எச்பி விஸ்டடோம் சுற்றுலா பயணிகள் ரயில் பெட்டி, எல்எச்பி குளிர்வசதி செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு படுக்கை வசதி ரயில்பெட்டிகள், குளிர் வசதி செய்யப்பட்ட தானியங்கி ஆய்வு ரயில் பெட்டி ஆகியவற்றை பார்வையிட்டனர். ஐசிஎப் கடந்த காலங்க ளில் மீட்டர்கேஜ் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, உணவறை, தபால் மற்றும் பார்சல் ரயில் பெட்டிகள் போன்ற பலவிதமான ரயில் பெட்டிகளை வங்க தேச ரயில்வேக்கு சுமார் 100 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஐசிஎப் பொதுமேலாளர் ஏ.கே.அகர்வால் மற்றும் இதர உயர் அதிகாரிகள் உடனான சந்திப்பின் போது, வங்கதேச ரயில்வே அமைச்சர் முகம்மது நூருல் இஸ்லாம் சுஜன் பேசுகை யில், வங்கதேச ரயில்வே தற்போது மீட்டர்கேஜ் தடத்தி லிருந்து அகல ரயில் பாதைக்கு மாறும் திட்டத்தை செயல்படுத்தி வருவதால், ஐசிஎப்பால் தயாரிக்கப்படும் எல்எச்பி ரயில்பெட்டிகளை பயன்படுத்த இயலும் என்று தெரிவித்தார். அதிக எண்ணிக்கை யிலான ரயில் பயணிகள் பயணம் செய்ய வசதியாக இலங்கை மற்றும் நேபாள ரயில்வேக்கு ஐசிஎப் சமீபத்தில் ஏற்றுமதி செய்துள்ள டீசல் மின்தொடர் வண்டிகளை வங்கதேச ரயில்வே ஐசிஎப்பில் இருந்து இறக்குமதி செய்ய விருப்பம் தெரிவித்த அவர் விரைவில் வங்கதேச ரயில் வேயின் உயர் அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்று ஐசிஎப்பிற்கு வருகை தந்து இதுகுறித்து முடிவு செய்யும் என்றார். இந்திய ரயில்வே மற்றும் வங்கதேச ரயில்வேக்கு இடையிலான உறவு சரித் திரப் புகழ் வாய்ந்தது என்றும் ஐசிஎப் அந்த உறவில் முக்கியப் பங்காற்றி உள்ள தாகவும் தெரிவித்ததுடன், வங்கதேசம் சுதந்திரம் பெற இந்திய வீரர்கள் தன்னு யிர்த் தியாகம் செய்ததை வங்கதேசம் எப்போதும் நினைவில் கொள்ளும் என்றும் வங்கதேச அமைச்சர் கூறினார்.