தேனி, மார்ச் 10- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலா ளர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் பெரியகுளத்தில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடை பெற்றது. கருத்தரங்கிற்கு மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் எஸ்.வெண்மணி தலைமை வகித்தார். சிஐடியு நிர்வாகி வளர்மதி வரவேற்றார். மாதர் சங்க மாநில துணைத் தலைவர் ஆர். மல்லிகா சிறப்பு ரையாற்றினார் .விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் ,சிஐடியு மாவட்ட செயலா ளர் எம். ராமச்சந்திரன்,விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் டி.கண்ணன், விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எல்.ஆர். சங்கரசுப்பு, மாதர் மாவட்டச் செயலாளர், பி. சித்ரா,வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சி. முனீஸ்வரன்,மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் , எம் .வேல் பிரகாஷ் உள்ளிட்ட கலந்து கொண்டனர். மதுரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை தெற்கு தாலுகாக்குழு சார்பில் திருப்ப ரங்குன்றத்தில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது. தாலுகாச் செயலாளர் என்.விஜயா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சி.மலர்விழி முன்னிலை வகித்தார். தாலுகாத் தலைவர் பி.மகா லெட்சுமி வரவேற்றார். மாதர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மல்லிகா, மாநிலச் செயலாளர் எஸ்.கே. பொன்னுத்தாய் ஆகியோர் கருத்துரையாற்றினர். சிஐடியு இணை அமைப்பாளர் பா. மகாலட்சுமி, தமுஎகச காமாட்சி ஆகியோர் வாழ்த்திப்பேசினர். தாலுகா பொருளாளர் ஜெயலட்சுமி நன்றி கூறினார். முன்னதாக மாதர் சங்கத்தில் மதுரை மாவட்டக் குழுவில் 35 வருடங்களாக பல்வேறு போராட்டங்க ளில் ஈடுபட்டு பணியாற்றிய பி.ஈஸ்வரி அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.