சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக விதி களுக்கு முரணாக தங்கள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டி வருவதாக சீன அரசு விமர்சித்தி ருக்கிறது. தங்கள் இலக்கை அடைவதற்காக உலக வர்த்தகக் கழகத்தின் விதிகளை சீனா மீறுவதாக புதிய அறிக்கையொன்றில் அமெ ரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் குறிப் பிட்டிருக்கிறது. இது பற்றி கருத்துத் தெரிவித்த சீனாவின் வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காவோ பெங், “கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சீனப் பொருளா தார வளர்ச்சிக்கு சீர்திருத்தங்களும், வெளிப் படைத்தன்மையும்தான் காரணம் “ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெளியிட்டிருக்கிறார். 2013 ஆம் ஆண்டில் மதத் தீவிரவாதிகளைக் கட்டுப் படுத்த மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலிக்கு தங்கள் படைகளை பிரான்ஸ் அனுப்பியது. 9 ஆண்டுகள் அங்கு தங்கள் படைகளையும், சில நட்பு நாடுகளின் படைகளையும் நிறுத்தி சண் டையில் பங்கேற்றனர். தற்போது மாலியில் ராணுவக் கலகம் நடந்து, அதன் மூலம் அமைக் கப்பட்டுள்ள ஆட்சியுடன் இணைந்து செயல் பட முடியாத நிலையில் இந்த படைகள் விலகல் என்ற முடிவை எடுத்திருக்கிறார்கள்.
சவூதி அரேபியாவின் தாக்குதல்கள் மற்றும் தடைகளுக்கு எதிரான தங்கள் நாட்டு மக்களை பெரும் அளவில் திரட்டப் போவதாக ஏமனின் அரசியல் தலைமைக் குழுவின் தலை வர் மஹ்தி அல் மஷாத் அறிவித்துள்ளார். அனைத்து வகையான வழிகளையும் கையாளு வோம் என்று தெரிவித்துள்ள அவர், எதிரிகளை எதிர்கொள்வதற்கு மக்களின் உறுதியான ஆதரவு மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். ஏமன் பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நாடாளுமன்ற அவைத்தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.