சென்னை,மே 10- தமிழ்நாட்டில் காவலர்களுக்கு காப்பீட்டு தொகை ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டப்பேரவையில் செவ்வாயன்று (மே 10) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 78 புதிய அறிவிப்பு களை வெளியிட்டார். பொதுமக்களிடையே போதைப் பொருட்கள் உபயோகம் மற்றும் புழக்கத்தைத் தடுக்கும் வகையில், மது விலக்கு அமலாக்கப்பிரிவு, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவுடன் இணைக்கப்பட்டு “போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவாக” மறுசீரமைக்கப்படும். வெளிமாநில குற்றவாளிகள் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோரை கட்டுக்குள் கொண்டுவர ஒருங்கி ணைந்த சுங்கச்சாவடி கண்காணிப்பு மையம் ரூ. 9 கோடியில் அமைக்கப் படும். காவல் ஆய்வாளர்களுக்கும் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை 30 லட்சம் ரூபாயிலிருந்து 60 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
இரவு ரோந்து பணிக்கு ரூ.300 சிறப்புப் படி
இரவு பணிக்கு செல்லும் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை உள்ளவர்களுக்கு சிறப்புப் படி மாதம் ரூ.300 வழங்கப்படும். இணைய தள சூதாட்டத்தில் ஈடுபட்டு தங்கள் உயிரை மாய்த்து கொள்வதற்கான காரணங்களை அறியும் பொருட்டு மாநில குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வு துறை கண்காணிப்பாளர் தலைமை யில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும். காவல்துறையில் உள்ள தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் அனைத்து ஆய்வாளர்களுக்கும் இடர்ப்படி தொகை உயர்த்தி வழங்கப்படும். நுண்ணறிவுப் பிரிவில் மற்ற பிரிவினருக்கு வழங்கப்படு வதைப்போல திட்டமிட்ட குற்ற நுண்ண றிவுப் பிரிவு ஆளிநர்களுக்கும் 5 விழுக்காடு சிறப்பு ஊதியம் அளிக்கப் படும்.
வாரவிடுமுறை
வார விடுமுறை காவலர்களுக்கு மட்டும் உள்ளது என்பதை இனிமேல் 15 நாட்களுக்கு ஒரு முறை உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர்க ளுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும். இதன்மூலம் 10,508 பேர் பயனடை வார்கள். சமூக ஊடகங்களைக் கண்காணிக்க மாநில காவல் தலைமையகத்தில், சமூக ஊடக மையம் அமைக்கப்படும். தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை பணிகளை செவ்வனே மேற்கொள்ள மாநிலத்திலுள்ள 11 காவல் சரகங்களி லும் தலா ஒரு காவல் துணைக் கண் காணிப்பாளர் பதவி ஏற்படுத்தப்படும். மாநில கணினிசார் குற்றப்புல னாய்வு பிரிவிற்கு காவலர் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் கணினிசார் குற்றத் தடுப்புப் பிரிவு தலைமையிடக் கட்டடம் கட்டப்படும். தீயணைப்புத் துறை மற்றும் சிறைத்துறை பணியாளர்க ளுக்கு காவல்துறை மருத்துவமனை களில் மருத்துவம் பார்க்கும் வசதி ஏற்படுத்தித் தரப்படும். கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 203 புதிய காவலர் குடியிருப்புகள் கட்டப்படும். 4,631 காவலர் குடியிருப்புகளில் ஏற்பட்ட பழுதுபார்ப்பு பணிகளுக்காக ரூ. 20 கோடியில் சிறப்பு நிதி நடப்பாண்டில் வழங்கப்படும். தொழில்நுட்ப நுண்ணறிவுப் பிரிவில் தரவுகளை சேமித்து வைக்கவும், விரிவாக்கம் செய்யவும் பயன்படும் வன்பொருள் வாங்கப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் தொடர்பான வழக்குகள் சம்பந்தப்பட்ட சான்றுப் பொருட்களை ஆய்வு செய்ய பிரத்தி யேக பிரிவு கொண்டு சென்னை தலைமை ஆய்வகத்தில் உருவாக்கப் படும். மதுரை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் தரப்படும் உயிரியல் மாதிரிகளின் மரபான விபரங்களை பெறுவதற்கான அதி நவீன மரபியல் ஆய்வு கருவி ஒன்று ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் வாங்கப்படும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையர் ஆகியோருக்கு இரண்டு புதிய இயங்கும் தடய அறிவியல் ஆய்வகங்கள் உருவாக்கித் தரப்படும்.
தீ ஆணையம்
காவல்துறைப் பணியாளர்களுக்கு இடர்ப்படி உயர்த்தி வழங்கப்பட்ட தைப் போன்று தீயணைப்பு பணியாளர்களுக்கும் இடர்ப்படி உயர்த்தி வழங்கப்படும். தீயணைப்புப் பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மிகைப்பணி ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். விழுப்புரம் மாவட்டம் – அன்னியூர், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை, சென்னை புறநகர் மாவட்டம் கொளத்தூர், செங்கல்பட்டு மாவட்டம் காலவாக்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் ஆகிய 6 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் ரூ. 11 கோடியில் நிறுவப்படும். தீ மற்றும் உயிர் மீட்புப் பணிகளில் புதிய தொழில்நுட்ப நுணுக்கங்களை செயல்படுத்தத் தேவையான திட்டங்களையும், புதிய பயிற்சி முறைகளையும் பரிந்துரைக்கும் நோக்கத்துடன் ‘தீ ஆணையம்’ ஒன்று புதிதாக அமைக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.