tamilnadu

img

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை மறுதேர்வு எழுத வைக்க அறிவுறுத்தல்

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை மறுதேர்வு எழுத வைக்க அறிவுறுத்தல்

தஞ்சாவூர், மே 10-  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பள்ளிக் கல்வித் துறை சார்பில், உயர்கல்வி வழிகாட்டி (கல்லூரிக் கனவு) ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 2024-2025 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சி மற்றும் சென்ற ஆண்டை விட கூடுதலாக தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியப் பெருமக்களை ஆட்சியர் பாராட்டினார்.  மேலும், “நடந்து முடிந்த அரசு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை உடனடியாக மறு தேர்வு எழுத வைத்து, தேர்ச்சியடையச் செய்து அவர்களுக்கும் உயர் கல்வியை தொடர வழிகாட்ட வேண்டும்” என ஆட்சியர் அறிவுறுத்தினார்.  இக்கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் இரா.அண்ணாதுரை, கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் து.ரோசி, துணை ஆட்சியர் (பயிற்சி) சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.