tamilnadu

img

அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டு பயிற்சி

அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டு பயிற்சி

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரச மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு வியாழக்கிழமை கல்வெட்டுகள் குறித்த பயிற்சி நடைபெற்றது. கல்லூரியின் முதுகலை வரலாறு மற்றும் ஆராய்ச்சி துறை மாணவிகளுக்கு மார்ச் 11 முதல், 13 தேதி வரை புதுக்கோட்டை அருங்காட்சியகமும், மதுரை அருங்காட்சியகமும் இணைந்து மூன்று நாட்கள் கல்வெட்டுப் பயிற்சி நடைபெற்றது. திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் உள்ள கல்வெட்டு படி எடுத்தல் நிகழ்வு மாணவிகளுக்கு செய்முறை வழி விளக்கமளிப்பட்டது. பயிற்சியில் அசோகன் பிராமி கல்வெட்டுகள், தமிழி கல்வெட்டுகள், தமிழ் கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள் மற்றும் கிரந்த கல்வெட்டுகள் ஆகியன காலம் தோறும் எவ்வாறு வளர்ச்சி பெற்றன என்பது குறித்த பயிற்சி வகுப்புக்கள் மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.                                                     இந்தக் கல்வெட்டு பயிற்சிக்கு, கல்லூரி முதல்வர் (பொ) ஞானஜோதி தலைமை வகித்தார். அருங்காட்சியக காப்பாட்சியரகள் மருது பாண்டியன், பக்கிரிசாமி, உதவி இயக்குநர் (ஒய்வு) ராஜா முகமது உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். இணை பேராசிரியர் முனைவர் சி.நீலாவதி நன்றியுரை ஆற்றினார்.