சிறு விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு பெற்றுவரும் தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பழ.நெடுமாறனை சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் புதனன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பேராசிரியர் சாலமன் பாப்பையா, சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், புறநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. ஜீவானந்தம், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் கே.அலாவுதீன், பாரதி புத்தகாலயம் பொறுப்பாளர் இரா.நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.