tamilnadu

ஒத்தி வைக்கப்பட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல்: மார்ச் 26 -இல் நடைபெறுகிறது

சென்னை,மார்ச் 13- நகர்ப்புற உள்ளாட்சி மறைமுகத் தேர்த லின்போது பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்ட பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என்று  மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி  நடை பெற்றது. இதில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறி விக்கப்பட்டன.  இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து மார்ச் 2ஆம் தேதி வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து மார்ச் 4ஆம் தேதி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலை வர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறை முகத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்த லின்போது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் திமுக வேட்பாளர்கள் தாங்களாகவே போட்டி யிட்டு வெற்றி பெற்றனர்.  

இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக அவசர ஆலோச னை நடத்தி, கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனைவரும் தங்கள் பதவியை உடனடி யாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை ஏற்று பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் மறைமுகத் தேர்தலை வரும் 26ஆம் தேதி நடத்திட உள்ளதாக ஏற்கெனவே ஆணை யத்தால் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆடு துறை பேரூராட்சித் தலைவர், துணைத் தலை வர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் வரும் 26ஆம் தேதி நடத்திட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  பல்வேறு காரணங்களால் தேர்தல் நடை பெறாமல் காலியாக உள்ள 62 பதவி யிடங்களுக்கு வரும் மார்ச் 26ஆம் தேதி மறை முகத் தேர்தல் நடத்த முடிவெடுக்கப் பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் காலை 9.30 மணிக்கும், நகராட்சி, பேரூராட்சி துணைத் தலைவர்களை தேர்ந்தெ டுப்பதற்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் மதியம் 2.30 மணிக்கும் தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலு வலகங்களில் நடைபெறும்” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.