ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை இந்திய மாணவர் சங்கம் வரவேற்பு
சென்னை, ஜூன் 3 - இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டத்தால் அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொ டுமை வழக்கில் கைதான குற்றவாளி ஞானசேகரனுக்கு, சென்னை மகளிர் நீதிமன்றம் 30 ஆண்டுகள் குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை வழங்கியிருப்பதை இந்திய மாண வர் சங்கம் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ. சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் கோ. அரவிந்தசாமி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது: சென்னை அண்ணா பல்கலைக் கழக கிண்டி பொறியியல் கல்லூரி யின் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி ஒருவர், டிச.23 அன்று பல்கலைக்கழக வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி டிசம்பர் 24 அன்று காவல் நிலையத் தில் புகார் அளித்த போது, காவல் துறை குற்றவாளியான ஞானசேகர னிடம், காவல் நிலையத்தில் தகவல்கள் மட்டும் எழுதி வாங்கிக் கொண்டு திருப்பி அனுப்பினர். இந்திய மாணவர் சங்கம் டிசம்பர் 25 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்திய தன் விளைவாக, இப்பிரச்சனை மூடி மறைக்கப்படாமல் வெளியே வந்தது. அதேபோல் பல்கலைக்கழக பதிவாளரும் காவல்துறையும் வழக்குப் பதிந்து உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் காவல்துறை குற்ற வாளியை கைது செய்வதில் அலட்சி யம் காட்டியதோடு, மாணவியின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க வும் தவறியது. இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டத்தால்தான் குற்றவாளியை கைது செய்து விசா ரணை மேற்கொண்டது தமிழ்நாடு காவல்துறை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டு கைதான ஞானசேகரன் குற்ற வாளி எனவும், ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப் பட்டுள்ளன எனவும் சென்னை மக ளிர் நீதிமன்றம் மே 28 அன்று தீர்ப்பளித்தது. ஜூன் 2 அன்று சென்னை மகளிர் நீதிமன்றம் ஞான சேகரனுக்கு 30 ஆண்டுகள் குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனையுடன் ரூ.90,000 அபராதம் விதித்து உத்தர விட்டுள்ளது. இந்த குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பின் தண்ட னையை இந்திய மாணவர் சங்கத் தின் தமிழ்நாடு மாநிலக் குழு வர வேற்கிறது. அதே சமயத்தில் கல்வி நிலை யங்களில் யுஜிசி விதிமுறைகளை பின்பற்றும் வகையில் விடுதிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வெளி நபர்கள் உள்ளே வர முடியாத அளவுக்கு பெரிய சுவர்கள் எழுப்பப்பட்டிருக்க வேண் டும். பெண்கள் தங்கியிருக்கும் பகுதி களில் பாதுகாவலர்கள் (ஒரு பெண் பாதுகாவலர் பணியில் இருக்க வேண்டும்) மற்றும் கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவற்றை பொருத்தி கண்காணிக்க வேண்டும். இந்த நெறிமுறைகள் எதையும் பின்பற்றாத அண்ணா பல்கலைக் கழக நிர்வாகத்தின் அலட்சிய போக்கினால் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடக்கத்திலிருந்தே இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண் டித்து வருகிறது. மேலும் மாணவி யின் பாலியல் வன்முறை வழக்கின் விபரங்களுடன், பாதிக்கப்பட்ட பெண் அடையாளங்களை உள்ள டக்கிய முதல் தகவல் அறிக்கையை கசியவிட்ட வழக்கில், தேசிய தக வல் மையம் உள்ளிட்டு விசாரித்து இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காத விதத்தில் கடும் நடவடிக் கையை உறுதி செய்ய வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் போல், தமிழ்நாட்டில் மாணவி களுக்கு இனிமேல் எந்தவொரு சம்பவமும் ஏற்படாமல் இருக்க தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அனைத்து கல்வி நிலையங்களிலும் உட்புகார் குழு (ICC) அமைத்து அதை மாணவிகளுக்கு தெரியப்படுத்திட வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலக் குழு தொடர்ந்து வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.