tamilnadu

img

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல கோடி முறைகேடு

சேலம், ஜூன் 7 - சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடை பெற்றுவரும் பல கோடி ரூபாய் முறைகேடுகளை கண்டித்து வரும்  9ஆம் தேதி வியாழனன்று பல்கலைக்கழகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.   இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,  சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன் னாள் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், பேரா சிரியர்கள், ஊழியர்கள் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறையால் விசாரணை நடைபெற்று வரு கிறது. மாணவர்கள் அரசியல் சார்ந்த பிரச்சாரங் களில் ஈடுபடக் கூடாது என்றும் அது முற்றிலும் தடை விதிப்பதாக குறிப்பிட்டு துணை வேந்தர் ஆணைப் படி அனுப்பப்பட்ட சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதனை இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளின் எதிர்ப்பால் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்படியான ஊழல் நடவடிக்கைகளிலிருந்து திசை திருப்பவே இதுபோன்ற சுற்றறிக்கை வெளி யிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கட்டடம் ரூ.2 கோடி
மராமத்து ரூ.8 கோடி

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு 2 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பல்கலைக்கழக கூட்ட அரங்கத்தை  8 கோடி ரூபாய் மராமத்துப் பணி என்ற பெயரில் செல விடப்பட்டுள்ளதாக ஆவணங்கள் தயார்செய்யப் பட்டுள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தர பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தொலைதூரக் கல்வி இயக்குநர், உடற்கல்வி இயக்குநர், நூலகர் உள்ளிட்ட எந்தப்  பதவிகளும் நிரந்தரப் பதவிகளாக நியமிக்கப்பட வில்லை. இதனால் ஏராளமான நிர்வாகச் சீர்கேடு, ஊழல் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. பல்கலைக்கழகத்தின் பொறுப்புப் பதிவாளராக செயல்பட்ட கணினி அறிவியல் துறையின் தலைவர் தங்கவேல் என்பவர் அந்தப் பல்கலைக்கழ கத்தின் பொறுப்புப் பதிவாளர், கணினி அறிவியல் துறையின் தலைவர், நிதித்துறையின் பொறுப்பா ளர் என மூன்று பதவிகளையும் ஒருங்கே வைத்துள்ளார். இவரே தனது துறைக்கு பொருள் வாங்க அனுமதி கோரி, அனுமதி வழங்கி, நிதி ஒதுக்கி ஏராளமான ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள் ளது தெரியவருகிறது. தன்னுடைய துறைக்கு 200  உயர் தர கணினிகளை வாங்குவதற்கு எந்த வித மான முறையான ஒப்பந்தப் புள்ளிகளும் போடாமல் தன்னிச்சையாக தரமற்ற கணினிகளை வாங்கி யுள்ளார்.

சோனிக் வால் என்ற மென்பொருளை 20 லட்சம் ரூபாயில் வாங்கி அது பயன்பாடற்ற நிலையில் உள்ளது. பல்கலைக்கழக வளாகத்தை பைபர் நெட்வொர்க் மூலமாக அனைத்து துறை களையும் இணைத்து இணைய வசதி செய்யும் திட்டம் தொடங்கப்பட்டு பல்கலைக்கழக வளா கத்தில் அது முழுமையடையாமல் உள்ளது. பல்கலைக்கழகத்தைத் தானியங்கி முறையில் கண்காணிப்பதற்கு 80 லட்ச ரூபாய் வரை செல வழிக்கப்பட்டு முழுமையாக அப்பணி நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்தின் கணினி அறிவியல் துறையில் 15  தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றி வரு கிறார்கள்.  இவர்களுக்கு அனைத்து விதமான தகுதி, திறமைகளும் இருந்தும் இவர்களிடம் இந்த பணி களை கொடுக்காமல் அவுட்சோர்சிங் மூலமாக தனியார் நிறுவனங்களுக்கு பணி வழங்கப் பட்டுள்ளது. இதில் பல கோடி ரூபாய் பல்கலைக் கழகத்திற்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. Bvoc,MSc Data Science,M.Tech போன்ற பாடப் பிரிவுகள் புனேவை தலைமை இடமாக கொண்டு  செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்திடம்  ஒப்படைக்கப்பட்டு பல லட்ச ரூபாய் பயிற்சி கட்டணம்  வசூலிக்கப்படுகிறது. இப்பாடப்பிரிவுகளில் ஏழை-எளிய மாணவர்கள் படிக்க  வாய்ப்பில்லாத நிலை உருவாகியுள்ளது. மேற்கண்ட பணியினை மேற் கொள்ள தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கை மாறியுள்ளது.

மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது

பல்கலைக்கழக மானியக் குழு தமிழக உயர்கல்வித் துறை செயலாளருக்கும், தமிழக அரசுக்கும் சமீபத்தில் ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விக்கு தாங்கள் அனுமதி வழங்கவில்லை என்றும், முறைகேடாக சேலம் பெரி யார் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வியை நடத்தி வருவதாகவும் அதை உடனடியாக கண்கா ணிக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு கடிதம் அனுப்பியுள்ளது. ஏழு பாடப்பிரிவு கள் தொலைதூரக் கல்வி மூலம் இணைய வழியில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்,

  பல்கலைக் கழக மானியக் குழுவின் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டு வருகிறது. தொலை நிலைக்கல்வியில் பயின்ற உள்நாட்டு, வெளிநாட்டு மாணவர்கள் ஆயி ரக்கணக்கானோர் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. பல்கலைக்கழகத்தில் நாக் (NAAC) கமிட்டியின் ஆய்விற்காக வருவதையொட்டி  பல்கலைக்கழக வளாகத்தை தூய்மை செய்வதற்காக ஜேசிபி இயந்தி ரம் கொண்டு 12 லட்ச ரூபாய்க்கு மராமத்துப் பணி செய்ததாக போலிக் கணக்கு எழுதப்பட்டுள்ளது.  முன்னாள் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா மற்றும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் கணினி அறிவியல் பாடப்பிரிவில் துறைத்தலைவர் தங்க வேல் மீது ஊழல் முறைகேட்டுக்கு முகாந்திரம் உள்ளதாகவும் இவரை பணி இடைநீக்கம் செய்து விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்ட கோப்பு கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மேற்கண்ட நபர் பல்கலைக்கழகத்தின் 12 குழுக்களில் உறுப்பினராக இருந்து கொண்டு பல்கலைக்கழகத்தில் ஏராள மான ஊழல் முறைகேட்டுக்கு வழி வகுத்துக் கொண்டு இருக்கிறார்.  எம்பிஏ தொலைதூர பாடப்பிரிவில் பாஸ்டன் என்ற தனியார் நிறுவனம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு 500க்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக 4 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர். இதில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முதல் பல்வேறு ஊழியர்கள் வரை லஞ்சப் பணம் கைமாறி உள்ளது. 

பதிப்புத் துறையில்...

பதிப்புத் துறையில் முன்னாள் துணைவேந்தர்  முத்து செழியன் மற்றும்  பதிப்பு துறை இயக்குநர் பெரியசாமி ஆகியோர் தங்களுடைய சுய சரிதை குறித்த புத்தகத்தை அச்சடிப்பதற்கு முறைகேடாக பயன்படுத்தியதாக ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டு இதுவரை முழுமையான விசாரணை நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது . அடித்த  புத்தகங்கள், அதை விற்ற கணக்குகள் ஏதும் இல்லை. பல்கலைக்கழக மானியக்குழு மாணவர் களின் சிறந்த ஆராய்ச்சியை  உலக அளவில் வெளிக் கொணர்வதற்கு உருவாக்கப்பட்ட பதிப்புத்துறை பணியை அதற்காக மேற்கொள்ளாமல் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்களும் பதிப்பாளர்களும் முறைகேடாகப் பயன்படுத்தி வருவது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கு என்று விடுதி செயல்பட்டு வருகிறது .ஒரு அறையில் 3 மாணவர்கள் தங்கும் அளவு மட்டுமே உள்ளது. ஆனால் விடுதி அறையில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை தங்க வைத்து மாணவர்கள் மிகப்பெரிய அளவிற்கு சிரமத்திற்கு உள்ளாகி வரு கின்றனர். உடனடியாக பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர் விடுதியை கட்டி மாணவர்களை பாது காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.    பல் கலைக்கழகத்தின் வளாக இயக்குநராக செயல்பட்டு வரக்கூடிய ஜெயப்பிரகாஷ் என்பவர் ஏராளமான போலி ஆவணங்களை தயார் செய்து பல லட்சம் ரூபாய் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் பல்கலைக்கழகத்தில் தற்கா லிகப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வரக்கூடிய தொழிலாளர்களை ஆட்டையாம்பட்டி பகுதியில் இருக்கக்கூடிய தனது தோட்டத்தில் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் பணி செய்ய வைத்து அதற்கான பணத்தை பல்கலைக்கழக நிதியிலிருந்து கணக்கு எழுதி கையாடல் செய்வதும் வெளிவந்துள்ளது. 

மதவெறி, சாதிவெறியை  தூண்டும் பதிவுகள்...

பல்கலைக்கழகத்தின் புவிசார் அறிவியல் பாடப் பிரிவின் தலைவராக இருக்கும் ராம்குமார் என்பவர் பல்கலைக்கழக பணி நேரங்களில் தன்னுடைய சமூக வலைதள கணக்குகளை அரசுக்கு  எதி ரான ஏராளமான கருத்துக்களை மதவெறி, சாதி வெறியைத் தூண்டக்கூடிய பிரிவினைவாத கருத்துக் களைப் பதிவிட்டு வருகிறார். அரசு பணியாளர் செயல்பாட்டு வரை முறைகளுக்கு மாறாக பணி  நேரத்தில் செயல்பட்டு வரும் பேராசிரியர் ராம்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்த ராகச் செயல்படக்கூடிய ஜெகநாதன் ஏற்கனவே கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பொழுது டிராக்டர் இயந்திரம் வாங்கியதில் ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. ஊழல் வழக்கில்  சிக்கியுள்ள நபரை தமிழக ஆளுநர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்து பெரியார் பல்கலைக் கழகத்தில் ஏராளமான ஊழல் முறை கேட்டுக்கு வழி வகுத்துள்ளார் .  எனவே தமிழக அரசு, துணைவேந்தர் ஜெகநாதன் மீதான ஊழல் வழக்குகளை உடனடியாக  விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம். சமூக நீதிப் போராளி தந்தை பெரியார் பெயரில் இயங்கக்கூடிய சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு முறை முறையாக பின்பற்றப்படாமல் உள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர் நியமனத்தில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு, முஸ்லிம்  இட ஒதுக்கீட்டு, பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டையும் மாற்று திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. மேலும் இப் பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டு களுக்கு மேலாக பணியாற்றி வரக்கூடிய 400 தினக்கூலி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களை   தமிழக அரசின் அரசாணைப்படி  நிரந்தரப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தேவை

இவ்வாறு தொடர்ச்சியாக ஏராளமான ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வரக்கூடிய சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேட்டை மாணவர் அமைப்புகளும், ஆசிரியர் அமைப்புகளும் அம்பலப்படுத்தி விடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு சேலம் பெரியார் பல் கலைக் கழகம் பேராசிரியர்கள், மாணவர்கள், பணி யாளர்கள் பல்கலைக்கழகத்தின் அனுமதியின்றி செய்தியாளர்களைச் சந்திக்கக் கூடாது என்ற சுற்ற றிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்டு வரும்  சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஊழல் முறைகேடுகளை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நடைபெற்று வரக்கூடிய ஊழல் முறைகேடுகளை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு ஊழல் பெருச்சாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாணவர் நலனை பாதுகாக்க  உச்ச நீதி மன்றத்தின் உத்தரவின்படி பல்கலைக்கழகம் மற் றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தலை ஜனநாயக முறையில் நடத்திட வேண்டும் . பல்கலைக்கழகத்தையும் அதில் படிக்கக் கூடிய மாணவர்களின் வாழ்க்கையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வருகின்ற ஜூன் 9-ஆம் தேதி சேலம் பெரியார் பல் கலைக் கழகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்டக் குழு  சார்பில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த சந்திப்பின் பொழுது சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவர் எஸ்.பவித்திரன், சேலம் மாநகரச் செயலாளர் அருண்குமார், மாவட்ட நிர்வாகிகள் அரவிந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.