tamilnadu

img

சமூக விரோத, குற்றச் செயல்களை தடுத்திட போதைப் பொருட்களுக்கு எதிராக அணிதிரள்வோம்!

சென்னை, ஜூலை 17 - சமூக விரோத, குற்றச் செயல்களை முற்றாகத் தடுத்திட போதைக்கு எதிராக அணிதிரள இளைஞர்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறைகூவல் விடுத் துள்ளது. ‘போதையற்ற தமிழ்நாடு’ எனும் முழக்கத்தோடு ஒரு கோடி கையெழுத்து பெறும் பிரச்சார விழிப்புணர்வு இயக்கத்தை இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் நடத்தி யது. பிப்.12ந் தேதி தொடங்கி சுமார் 150 நாட்கள் இந்த இயக் கம் நடைபெற்றது. இதன் நிறைவு நிகழ்ச்சி  ஞாயிறன்று (ஜூலை 16) லயோலா கல்லூரி யில் நடைபெற்றது.

பொதுபிரகடனம் வெளியீடு

இந்த மாநாட்டில் சங்கத் தின் சார்பில், தடை செய்யப் பட்ட போதைக்கு எதிரான பொதுப்பிரகடனத்தை வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஏ.ஏ.ரஹீம் எம்.பி., வெளியிட, ஜோதிமணி எம்.பி., பெற்றுக் கொண்டார். அந்த பிரகடனத்தின் இடம் பெற்றுள்ள 20 அம்சங்கள் வருமாறு:

1.தேசத்தின் இளம் சமூகத் தின் மீது நிகழ்த்தப்படும் போதைச் சீரழிவைத் தடுத்திட  அனைவரும் கை கோர்ப் போம்.

2. சமூக ஒற்றுமையை, அமைதியை சீர்குலைக்கும் போதை கலாச்சாரத்தை தடுத் திட ஒன்றிணைவோம்.

3. சமூக விரோத, குற்றச் செயல்களை முற்றாகத் தடுத் திட போதைக்கு எதிராக அணிதிரள்வோம்.

4. போதைப் பொருட் கள் மாபெரும் வணிகம் என்ப தையும் கடந்து; சாதிய, மத வெறி கும்பல்களின் சுய லாப நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள நினைப்போரை, இளைஞர்களின் வாழ்வை சீரழிப்பதை தடுத்து நிறுத்திட களம் காண்போம்.

5. இளம் சமூகத்தின் அறி வாற்றல், உடல் ஆரோக்கி யத்தை பாதுகாத்து விபத்து களை தடுத்திட போதைக்  கலாச்சாரத்தை வேரறுப் போம்.

6. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் சாக்லேட், கேக் உள்ளிட்ட பொருட்களை, போதை  கலந்த வியாபாரப் பொருளாக  மாறி வருவதை தடுத்து நிறுத்து வோம்.

7. முற்போக்கான, அறிவியல் பூர்வமான சமூகக் கட்டமைப்பை வளர்த்தெடுக்க போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்க செயல்படுவோம்.

8. போதைப் பழக்கத்தால், பெண்கள் மீது ஏவப்படும் வன்முறைகளை தடுத்திட உறுதியேற்போம்.

9. போதைப் பழக்கத்தால் அதிகரித்து வரும் குடும்ப வன்முறைகளைத் தடுக்க சபதமேற்போம்.

10. போதை பொருட்கள் தடுப்பு பிரிவானது (நார் கோடிக்ஸ் கன்ட்ரோல் பியூரோ) அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு - 47 ன் படி, மருத்துவ பயன்பாட்டிற்குத் தவிர மற்ற போதைப் பொருட் கள் புழக்கத்தை தடுக்க வலியுறுத்துவோம்.

11. கொடிய போதைப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக போராடும் சமூக செயற்பாட்டாளர்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்திட, குற்றவாளிகள் மீது  முறையான சட்ட நடவடிக் கையை மேற்கொள்ள முன்நிற்போம்.

12. புகையிலை மற்றும் நிக்கோடின் இவற்றை உணவுப் பொருட்களோடு சேர்த்து தயாரித்து சேமித்து வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்ற நபர்கள் மீது அரசால் எடுக்கப் பட்டு வரும் நடவடிக்கையை துரிதப்படுத்த குரலெழுப்பு வோம்.

13. தமிழ்நாடு அரசால்,  அனைத்து கல்வி நிலையங் களிலும் அமைக்கப்பட்டுள்ள போதைப் பொருட்கள் கண் காணிப்புக் குழுவோடு இணைத்து; ‘விழிப்புணர்வு ஆலோசனை மையங்களை’ அமைத்திட அரசை வலியுறுத் துவோம்.

14. கல்வி நிலையங்க ளுக்கு அருகில் போதை பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்தும் வகையில், காவல் துறையோடு பொது மக்களும் இணைந்த கண்காணிப்பு மையம் (பூத்) அமைக்க வலியுறுத்துவோம்.

15. போதை மருந்திற்கு அடிமையாக்கப்படும் குழந் தைகளுக்கு பிரத்யேகமாக  ‘சிறப்பு சிகிச்சை மையங் களை’ மருத்துவமனை களில் உடனடியாக அமைத்திட வலியுறுத்துவோம்.

16. சமூக பாதுகாப்பு துறை யின் கீழ் இயங்கி வரும் இளம் சிறார் இல்லங்கள், குழந்தை இல்லங்கள் ஆகியவற்றில் போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான கண்காணிப்பு குழுக்களை அரசு தீவிரப்படுத்துவதோடு ‘விழிப்புணர்வு ஆலோசனை மையங்களை’ ஒன்றிணைந்து உருவாக்கிடுவோம்.

17. போதை பொருள்  பயன்பாட்டிற்கு அடிமை யானவர்களுக்கு மறுவாழ்வு அளித்திடும் வகையில் செயல்படும் ‘ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்கள்’ தொடர்ந்து இயங்கிட ஒன்றிய அரசின் நிதியினை தொய்வில்லாமல் வழங்கிட வலியுறுத்துவோம்.

18. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து துறைமுகங்கள் வழியாக மிக எளிதாக தமிழ் நாட்டிற்குள் புழக்கத்தில் வரும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு மூலாதாரமாக இருக்கும் கார்பரேட் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.

19. போதைப் பழக்கத்தி லிருந்து மீண்டு வரக்கூடிய நபர்களை அவரது குடும்பம், புதுச்சமூகம் அங்கீகரித்து கண்ணியமிக்க வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற வகையி லான சமூகச் சூழலை உரு வாக்க உறுதியேற்போம்.

20. தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களின் பயன்பாட்டைத்  தடுக்க அரசு மற்றும் காவல் துறையோடு சேர்ந்து பொதுமக்களாகிய நாமும் இணைந்து  செயல்படு வோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.