திருவள்ளூர், பிப்.8- சென்னை: “புதுமைப் பெண் திட்டத்தால் பெண்களின் உயர் கல்வி சேர்க்கை கடந்த ஆண்டை விட 27 சதவீதம் அதிகமாகி இருக்கிறது” என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 1,04,347 மாணவிகள் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்ட “புதுமைப் பெண்” திட்டத்தை முதல்வர் புதன்கிழமை (பிப்.8) திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசு கையில்,ஒரு நாடு செழித்து தன்னி றைவுடன் திகழ வேண்டுமென்று சொன்னால், நாட்டில் உள்ள மக்கள் கல்வியறிவு பெற்றவர்களாய் இருப்பது மிகவும் அவசியம். முக்கியமாக, கல்வி என்பது பெண்களுக்கு மிகமிக முக்கியம்! கல்வியைத்தான் அழியாச் செல்வம் என்று சொன்னார் வான்புகழ் கொண்ட வள்ளுவர் பெருந்தகை. ‘கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம்’ என்று சொன்னார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். 1921-ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. 1989-இல் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, இந்தியாவிலேயே முதன்முதலாக கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தான் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்ட அந்த புரட்சி நடந்தது. அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம். இன்றைக்கு உள்ளாட்சி அமைப்புகளை பார்க்கிறோம், இன்றைக்கு 50 சதவீதம் பெண்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இதற்கு மூல காரணமே கருணாநிதி ஆட்சிக்காலம் தான், முதன்முதலாக பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதுதான் இன்றைக்கு படிப்படியாக வளர்ந்து 50 சதவீதமாக உருவாகியிருக்கிறது. மகளிர் உரிமைக்காக நாம் எவ்வ ளவோ செய்திருக்கிறோம், எவ்வளவோ போராடியிருக்கிறோம்
பல்வேறு சிரமங்களுக்கு இடை யில், பள்ளிக்கல்வி பயின்றுள்ள அரசுப்பள்ளி மாணவிகள், படிப்பில் இருந்து பாதியில் நின்றுவிடக்கூடாது என்பதற்காக மூவலூர் அம்மையார் பெயரால் உயர்கல்வி உறுதித் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தத் திட்டத்தின் மூலமாக 6-ம் வகுப்பில் படிக்கக் கூடியவர்கள், அவர்கள் தொடர்ந்து 12-ம் வகுப்பு வரை படித்து, முடித்து, மேற்படிப்பிற்கு, கல்லூரிக்கு செல்லுகின்ற நேரத்தில் அவர்களுக்கு வசதி இல்லாத காரணத்தினால், கல்லூரிக்கு செல்லமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகதான் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்துகிறோம். இந்த திட்டத்தால் பல பெண்கள் கல்லூரிக்குள் நுழைகிறார்கள். இதன் மூலமாக தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகமாகும். படித்த வருடைய எண்ணிக்கை அதிகமா கும். அறிவுத்திறனும் கூடும். திறமை சாலிகள் அதிகமாக உருவாகுவார்கள். பாலின சமத்துவம் ஏற்படும். குழந்தைத் திருமணங்கள் குறையும். பெண்கள் அதிகாரம் பெறுவார்கள். சொந்தக் காலில் பெண்கள் நிற்பார் கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.