tamilnadu

அதிகரிக்கும் தென்னை விவசாய சாகுபடி

உடுமலை வட்டாரத்தில் 34 ஆயிரம் ஏக்கர் பரப்பள விலும், குடிமங்கலம் வட்டாரத்தில் 26 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும், மடத்துக்குளம் வட்டாரத்தில் 7,500 ஏக்கர் பரப்பளவிலும் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்லடம், பொங்க லூர் பகுதிகளிலும் 20 ஆயிரம் ஏக்கர் என மாவட்டத் தில், 65 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. ஆண் டுக்கு, 30 சதவீதம் சாகுபடி பரப்பு அதிகரித்து வரு கிறது. இதனை அடிப்படையாக கொண்டு  தென்னை விவசாயிகளுக்காக உடுமலை திருமூர்த்தி மலை யில் தென்னை ஆராய்ச்சி மற்றும் விதைப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இதன் ஓரு பகுதியாக தென்னை விவசாயிக ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர் நிறுவனத் தில் ஆயிரம் தென்னை விவசாயிகள் பங்குதாரர்க ளாக உள்ளனர். தென்னை விவசாயிகளின் நல னுக்காக2015 ஆண்டு தொடங்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தென்னையில் வரும் பூச்சி தாக்குதல், நோய்கள், இவற்றை கட்டுப் படுத்தும் முறைகள் குறித்து தென்னை விவசாயிக ளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.  மேலும் தேர்ந்த வல்லுநர்களை கொண்டு வேர் வழியாக பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்துதல் அதிக மகசூல் ஈட்டுவதற்கு நுண்ணூட்ட டானிக்கை வேர் மூலம் கட்டி தருகிறார்கள். மேலும் தென்னை வளர்ச்சி வாரியத்தின் திட்டங்களை அனைத்து விவ சாயிகளிடமும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. நீரா  பானம் உரிமம் திருப்பூர் மாவட்டத்திலேயே முதல் நிறுவனமாக பெற்று ஒரு விவசாயிக்கு 20 மரங்கள் கட்டுவதற்கு நிறுவனத்தின் மூலம் உரிமம் கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் நீரா பானத்திலிருந்து சர்க்கரை,  கருப்பட்டி, தேன் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட் கள் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தென்னை விவசாயிகளின் வாழ்வா தாரம் உயர்வதோடு தேங்காய்க்கு நிலையான விலை கிடைப்பதற்கு இந்த நிறுவனம் தொடர்ந்து இயங்கி வருகிறது.