குற்றத்தோடு மதத்தை இணைப்பதா?
அனைத்து கட்சி கூட்டமைப்பு கண்டனம்
மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் முன்னிலை வகித்தார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன் னாள் எம்எல்ஏ., எம்.ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், சிபிஐ மாவட்ட செயலாளர் சி.சிவசாமி மற்றும் ஜேம்ஸ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், காங் கிரஸ் கட்சியின் ச.தமிழ்செல்வன், எம்.அனீஸ், தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜோ. இலக்கியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரு மாறு: 23 ஆம் தேதி கோவையில் நடைபெற்ற வெடிச்சம்ப வம் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்துகிறது. தமி ழக காவல்துறையின் விரைவான நடவடிக்கைகள் காரண மாக பெரும் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டிருக்கிறது. காவல்துறை உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதற்கும், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கும் எடுத்துவரும் நடவடிக்கைக்களுக்கு இடையூறாக பரப்பப்படும் உண்மைக்கு மாறான செய்தி களையும், தொடர் பதற்றத்தை ஏற்படுத்துமாறு சில ஊட கங்களின் செய்தி வடிவமைப்பையும் இக்கூட்டம் வன் மையாகக் கண்டிக்கிறது.
குற்றம் நடத்தப்பட்ட விதம் கண்டறியப்படுவதற்கும் குற்றவாளிகள் தண்டிக்க படுவதற்கும் இக்கூட்டம் எல்லா வகையிலும் ஆதரவு தருகிறது. ஆனால் அதே நேரத்தில் குற்றத்தோடு அவர்கள் சார்ந்த மதம் இணைக் கப்படுவதை இக்கூட்டம் முழுமையாக நிராகரிக்கிறது. கோவையின் தொழிலுக்கும் – வணிகத்திற்கும், சமூக அமைதியும் மத நல்லிணக்கமும் இன்றியமையாதது என் பதை அனைவரும் உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்று கோவை மக்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கி றது. இம்மாதிரியான சம்பவங்கள் ஒரு மதத்திற்கு எதி ரானதாக பயன்படுத்தப்படுவதை மக்கள் எச்சரிக்கை யோடு நிராகரிக்க வேண்டும்.
கோயம்புத்தூர், அக்.25- கார் சிலிண்டர் விபத்தின் எதிரொலியாக கோவை மாந கரில் காவல்துறையுடன் இணைந்து மத்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். உபா சட்டத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியா ளர்களிடம் தெரிவித்தார். கோவை மாநகர பகுதி யில் உக்கடம் கோட்டை ஈஸ் வரன் கோவில் அருகே, ஞாயிறன்று மாருதி காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் கோட்டைமேடு பகு தியை சேர்ந்த ஜமேசா முபின் (29) என்பவர் பலியானார். இதனைத்தொடர்ந்து, விபத் தில் எரிந்த கார் மற்றும் வீட் டில் சோதனை செய்யப்பட்ட தில், அழுத்தம் குறைவான நாட்டு வெடிகுண்டு தயா ரிப்பதற்கான மூலப்பொருட் கள் கண்டறியப்பட்டுள்ள தாக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் தெரி வித்திருந்தார்.
இந்நிலையில், இறந்து போன ஜமேசா முபின் வீட் டில் இருந்து மூட்டைகளை சிலர் எடுத்தும் செல்லும் சிசி டிவி காட்சிகளும் வெளியா கின. இந்த சம்பவம் தொடர் பாக கோவை மாநகரம் பி 4 உக்கடம் காவல்நிலையத் தில் வழக்கு பதிவு செய்யப் பட்டு புலன் விசாரணை மேற் கொள்ளப்பட்டு வந்தது. இந்த சிசிடிவி காட்சிகளில் தொடர்புடைய உக்கடத் தைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகரைச் சேர்ந்த முக மது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகி யோரை கைது செய்தனர். இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செவ்வா யன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை உக்க டம் பகுதியில் காரில் சிலிண் டர் வெடித்து சிதறியதில் முபின் என்ற நபர் தீக்காயங் களுடன் இறந்தார். உக்கடம் காவல் நிலையத்தில் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப் பகுதியில் காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு தடயங்களை பாது காத்து அறிவியல்பூர்வமாக அனைத்து புலன் விசாரணை யும் நடந்து வருகிறது. உயி ரிழந்த நபரை 12 மணி நேரத் தில் கண்டறிந்தோம். வெடித்து சிதறிய கார் 10 பேரிடம் விற் பனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் குறித்து விசா ரணை நடத்தப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக திங்க ளன்று இரவு 5 பேரை கைது செய்துள்ளோம்.
அவர்கள் மீது கூட்டு சதி, இரு பிரி வினர் இடையே மோதல் ஏற் படுத்துதல், உபா சட்டம் ஆகிய பிரிவுகளிலும் 5 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது. 5 பேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படு கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக 20 க்கும் மேற்பட் டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம். சந்தேகப் படும் நபர்களை விசாரித்தும், அவர்களின் வீடுகளை சோதனை செய்தும், அவர் களை கண்காணித்தும் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. உடனடி யாக காவல் துறை நட வடிக்கை எடுத்துள்ளது. எந்த சட்டம் - ஒழுங்கு பிரச்சனை யும் ஏற்படாத வகையில் தீபா வளி பண்டிகை கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. வேறு யார், யார் சம் பந்தப்பட்டுள்ளார்கள் என் பது குறித்து விசாரணை நடத் தப்பட்டு வருகிறது. யூகங்கள் அடிப்படையில் பல தகவல் கள் பகிரப்படுகிறது. ஆனால், தடயவியல் அறிக்கை வந்த பின்பு முழுமையாக தகவல் கிடைக்கும். முபின் வீட்டில் இருந்து இரண்டு சிலிண்டர், 3 கேன் டிரம் உள்ளிட்டவை காரில் எடுத்துச் செல்லப்பட் டுள்ளது. அதில் என்ன பொருட் கள் இருந்தது என்பது குறித்து தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளோம். 3 பேர் சிலிண்டர் தூக்க உதவி செய் துள்ளனர். ஒருவர் ஒருங்கி ணைப்பு செய்துள்ளார். ஒரு வர் காரினை தயார் செய்து தந்துள்ளார். அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
பாதுகாப்பு அதிகரிப்பு
இச்சம்பவத்தின் எதி ரொலியாக கோவை மாநக ரில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந் திர பாபு மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாம ரைகண்ணன் கோவையில் முகாமிட்டு விசாரணை மற் றும் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருவது டன் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் மற் றும் கோவை மாநகர காவல் ஆனையர் பாலகிருஷ்ணன் தலைமையில் இரண்டு டிஐஜி மற்றும் எட்டு மாவட்ட காவல்கண்காணிப்பாளர், 10 மாவட்ட காவலர்களுடன் இணைந்து 240 மத்திய அதி விரைவு படையினர் என சுமார் 3000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அதிவிரைவு படை யினர் கோவை உக்கடம் மற் றும் கண்ணப்பன் நகர் பகுதி களில் இரண்டு குழுக்களாக பிரிந்து வஜ்ரா வாகனங்களு டன் துப்பாக்கி ஏந்தி பாது காப்பு பணியை மேற் கொண்டு வருகின்றனர். குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையங்களிலும் டவுன் ஹால், உக்கடம், கோட்டை மேடு மற்றும் கரும்புக்கடை போன்ற பகுதிகளில் பாது காப்பு பணியை மேற் கொண்டு வருகின்றனர்.