tamilnadu

ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு

சென்னை,ஜன.25- 7-வது ஊதியக்குழுவின் ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அமல்படுத்தப்படாமல் இருந்தது. அவர்களுக்கும் தற்போது அகவிலைப்படியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 14  விழுக்காடு அகவிலைப்படி உயர்வு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி வித்தார். ஜனவரி 1 ஆம் தேதி முதல் இது  நடைமுறைக்கு வந்தது. 7-வது ஊதி யக்குழு சலுகை பெற்றவர்கள் இந்த மாத  இறுதியில் புதிய அக விலைப்படி உயர்வு டன் சம்பளம் பெறுவார்கள். இந்த நிலையில் 7-வது ஊதியகுழு வின் ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அமல்படுத்தப்படாமல் இருந்தது. அவர்களுக்கும் தற்போது அகவிலைப் படியை உயர்த்தி அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய  விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்க ளுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுப வருக்கு 164 விழுக்காட்டிலிருந்து 196 விழுக் காடாக அகவிலைப்படியை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.