tamilnadu

img

மின் கட்டணம் உயர்வு விசைத்தறிகளுக்கு இருண்டகாலம்?

பள்ளிச்சீருடை- இலவச வேட்டி சேலை உற்பத்தி பாதிக்கப்படும்

அத்துடன் 2023-ஆம் ஆண்டுக்கான இலவச வேட்டி-சேலை தயாரிப்புக்கான உத்தரவை இந்த ஜூன் மாதமே வழங்க வேண்டுமென தமிழக அரசை விசைத்தறியாளர்கள் வலியுறுத்தியிருந்தனர். ஏனெனில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பள்ளிச் சீருடைகள், வேட்டி, சேலைகள் மாநிலத்தில் உள்ள 67,000 விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள 223 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஜூன் மாதம் அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

இதன் மூலம் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பயனடைவர். இந்த ஆர்டர்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் வேட்டிகள்- சேலைகள் உற்பத்தி செய்வது காலதாமதமாகும். 2023-ஆம் ஆண்டிற்காக இலவச வேட்டி-சேலைகளுக்கு ஜூன் மாதம் ஆர்டர் கொடுத்தால் மட்டுமே, டிசம்பர் இறுதிக்குள் உற்பத்தியை முடிக்க முடியும்.  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் வேட்டிகள் தயாரிப்பதற்கான ஆர்டர் வழங்கப்பட்டது. நவம்பர் மாதம் தான் புடவைகளுக்கான ஆர்டர் தரப்பட்டது.  கடந்த ஆண்டு பொங்கலுக்காக 1.67 கோடி வேட்டி-சேலைகள் தயாரிக்கப்பட்டு ரேசன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மின்கட்டண உயர்வால், இலவசப் பள்ளிச் சீருடைகள், வேட்டி, சேலையை உற்பத்தி செய்து  கொடுக்கும் விசைத்தறியாளர்கள் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.

தமிழகத்தில், 3.20 லட்சம் பதிவு செய்யப்பட்ட விசைத்தறிகள் உள்ளன. 24,000 தறிகளை உள்ளடக்கிய 142 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களின் ஆண்டு வருவாய் சுமார் ரூ.20 கோடி. இந்தச் சங்கங்கள், காடாக்கள், அச்சிடப்பட்ட புடவைகள், லுங்கிகள், பெட் ஷீட்கள், அலங்காரப் பொருட்கள், தலை யணை கவர்கள், கலவையான வேட்டிகள் மற்றும் சேலைகள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்கிறது அதிகாரப்பூர்வ இணையதள தகவல். ஆனால், மாநிலத்தில் ஆறு லட்சம் விசைத்தறிகள் உள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. இவற்றில் 3.5 லட்சம் விசைத்தறிகள் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 60 மீட்டர் அளவிலான துணியை உற்பத்தி செய்கின்றன. மீதமுள்ள 2.5 லட்சம் தறிகள் சேலம், குடியாத்தம், திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் உள்ளன. இவர்கள்  லுங்கி, சேலை உள்ளிட்ட 30 மீட்டர் அளவிலான துணியை உற்பத்தி செய்கின்றன. 

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் விசைத்தறிக்கு 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.  பின்னர் முதல்வர் ஜெயலலிதாவால் அது 750 யூனிட்டாக உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு ஈரோட்டில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இலவச மின்சாரம் தொடர்ந்து நீட்டிக்கப் படும்; 750 யூனிட் என்பது 1,000 யூனிட்டாக அதிகரிக்கப்படும்” என்றார்.  இந்த நிலையில் விசைத்தறியாளர் களுக்கு  (கட்டணம் 3A2 இன் கீழ் வரும்) யூனி ட்டுக்கு 70 பைசா உயர்த்த தமிழக அரசு முடி வெடுத்துள்ளது. இது விசைத்தறியாளர் களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 15-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் வைத்திருக்கும் பி.கந்தவேல் கூறுகையில், மின் கட்டண உயர்வு காரணமாக, 15-க்கும் மேற்பட்ட விசைத்தறி வைத்திருப்பவர்கள், கூடுதலாக, ரூ.4,000 - ரூ.5,000 வரை செலுத்த வேண்டியுள்ளது. ஏற்கனவே தொழில் நலி வடைந்து வருவதால், இது எங்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. தி.மு.க. வின்  தேர்தல் வாக்குறுதியான மாதம்தோறும் மின் கட்டணம் செலுத்துவதை அமல்படுத்தி யிருந்தால் நிலைமையை ஓரளவு சமாளித் திருப்போம் என்கிறார். தமிழ்நாடு குடிசை மற்றும் குறுந்தொழில் சங்கத் தலைவர் ஜேம்ஸ் கூறுகையில்,  மின்கட்டணம் ரூ.8-லிருந்து ரூ.10-ஆக  உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு, இந்தத் துறையை கடுமை யாகப் பாதிக்கும் என்கிறார். 

“குஜராத்தில் உள்ள தொழில்நிறுவனங் களுடன் எங்களால் போட்டியிட முடியாது. கோயம்புத்தூரில் தொழிற்சாலைகள் நிர்ண யித்த விலையை விட 20 சதவீதம் குறைவான விலையில்  தான் நாங்கள் மோட்டார் பம்பு களை விற்பனை செய்கிறோம் என்கிறார். இந்த நிலையில் விசைத்தறி உற்பத்தி யாளர் சங்கத் தலைவர் எல்.கே.எம். சுரேஷ் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடி தத்தில்,  மாநிலத்தில் ஆறு லட்சம் விசைத்தறி கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் 30 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கு கின்றன. திமுக தனது தேர்தல் அறிக்கை யில் ஆட்சிக்கு வந்தவுடன் இலவச மின்சா ரம் 1,000 யூனிட்டாக உயர்த்தப்படும் என  வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால்,  தற்போது ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 70 பைசா உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவத்துறைக்கான  துணி உற்பத்தி

இராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருத்தியின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மருத்துவத்துறை துணி (பேண்டேஜ்)உற்பத்தியாளர்கள்  வேலை நிறுத்தம் செய்த னர். இதன் மூலம் 5,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூடப்பட்டன. இதனால் 10,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர் என்பதும் கவனிக்கத்தக்கது. ஏற்கனவே பஞ்சு விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த தொழில்துறை ஒரு வார  காலம் வேலை நிறுத்தம் செய்து பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின் இப்போது தான் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.

விசைத்தறித் துறை பருத்தி நூல் மற்றும் இதர மூலப்பொருட்களின் விலை உயர்வு, கூலி உயர்வு, ஆட்டோ லூம்களின் போட்டி,  உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் தேக்கம் உள்ளிட்ட பல சவால்களைச் சந்தித்து வருகிறது.  விசைத்தறி வைத்தி ருப்பவர்கள்  யூனிட்டுக்கு 70 பைசா  செலுத்த  வேண்டுமென்பதால் இனி விசைத்தறியின் எதிர்காலம் இருண்டதாகத்தான் இருக்கும். எனவே தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தைப் பாதுகாக்க மின்கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். விசைத்தறியாளர்கள் நிலை குறித்து யோசிக்கையில் திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறுவதாக ஒரு காட்சி சமீ பத்தில் வைரலானது. அதாவது, “ கேஸ் விலை கூடி விட்டது. எனவே மின்சார அடுப்பை வாங்கி வந்தேன். வீட்டிற்கு வந்தால் மின் கட்டணம் உயர்ந்துவிட்டது என்றனர்” என்பது தான் அது. ஒன்றிய அரசின் பஞ்சு விலை உயர்வுக்கு எதிராகப் போராட் டம் நடந்து ஓய்ந்துள்ள விசைத்தறியாளர்கள்  மின்கட்டண உயர்வுக்காக மீண்டும் ஒரு போராட்டத்தை தொடங்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது தமிழக அரசு.