tamilnadu

img

கே.ஆர்.பி. அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி, ஜூலை 11-  கிருஷ்ணகிரி நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணை ஆற்றுபடுகை மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை யால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த 6-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 392 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இந்த  நிலையில் திங்களன்று காலை நிலவரப் படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1056 கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து கர்நாடகா மற்றும் தென்பெண்ணை ஆற்று படுகை பகுதியில் மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் தண்ணீரை  வினாடிக்கு 1,242 கனஅடி தண்ணீரும் பாசனத்திற்காகவும், ஆற்றிலும் பொதுப்பணித்துறையினர் திறந்து விட்டுள்ளனர். விவசாயிகள் மகிழ்ச்சி தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால், முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. கே.ஆர்.பி. அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.