விவசாயத் தொழிலாளர் நலன்களுக்கான நிதி அதிகரிப்பு
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டிற் கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயத் தொழிலாளர்களுக்கான விபத்து நிதி மற்றும் இயற்கை மரண உதவித்தொகை உயர்த்தப் பட்டுள்ளதற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வரவேற்பு தெரி வித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் எம்.சின்னதுரை எம்.எல்.ஏ மற்றும் பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம் ஆகி யோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறி விக்கப்பட்ட பின்வரும் நலத்திட்டங்களை வரவேற்றுள்ளனர்: விவசாயத் தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்கள் அதிகரிப்பு விபத்தில் இறக்கும் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் இழப்பீடு விபத்தில் உடல் உறுப்புகளை இழக்கும் தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் இழப்பீடு இயற்கை மரணத்திற்கு ரூ.30,000 உதவி ஈமச்சடங்கு நிதியாக ரூ.10,000 உதவி பிற சமூகநலத் திட்டங்கள் குறித்த பாராட்டு பொது விநியோகத் திட்டத்திற்கு ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கீடு பெற்றோரை இழந்த 18 வயதுக்குட் பட்ட 50,000 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை சிதிலமடைந்த அரசு வீடுகளை இடித்துவிட்டு ரூ.2.40 லட்சத்தில் 25,000 புதிய வீடுகள் கட்டுவதற்கான திட்டம் 10 முக்கிய நகரங்களில் மூத்த குடி மக்களுக்கான அன்புச்சோலை முதியோர் இல்லம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் எனினும், சில முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததையும் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது:
1. விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்கள் நலவாரியம் சட்டப்பூர்வமாக அமைக்கப்படவில்லை.
2. விவசாயத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலி 2021-க்குப் பிறகு உயர்த்தப்படவில்லை.
3. நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத் திற்கு நேரடி நிதி ஒதுக்கீடு இல்லை.
4. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நூறு நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தும் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட வில்லை. விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கைகள் சங்கம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது: ஆண், பெண் தொழிலாளர்களுக்கு 6 மணி நேர வேலைக்கு தினக்கூலி ரூ.600 நிர்ணயம் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக அமலாக்கம் செய்தல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் (ரூ.2,000 கோடி) 60 சதவீத நிதியை கூலிக்காக ஒதுக்கீடு செய்தல் கிராமங்களை உள்ளடக்கிய பேரூ ராட்சிகளில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்குதல் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நிலுவையில் உள்ள ரூ.2,839 கோடி கூலியை ஒன்றிய அரசிடமிருந்து பெறுதல் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் ஒரு வீட்டிற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.3.50 லட்சத்தி லிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துதல் அமைச்சரிடம் மனு அளிப்பு மார்ச் 15 அன்று, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரனை, சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக் குழுத் தலைவர் நாகைமாலி, மாநிலத் தலைவர் மா.சின்னதுரை எம்எல்ஏ, மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில பொருளாளர் அ.பழநிசாமி, மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் சந்தித்து, மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் அடங்கிய விரிவான மனுவை அளித்தனர். இக்கோரிக்கைகளை முதலமைச்சரின் கவ னத்திற்குக் கொண்டு செல்வதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.