சென்னை,அக்.13- அனைத்து கூட்டுறவுபால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 38 விழுக்காடு ஆக உயர்த்தி சமன் செய்து வழங்க பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு துறையின் கீழ் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமும், 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்துக்கும், சேலம், மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 6 மாவட்டத்துக்கும் 38 விழுக்காடு அகவிலைப்படி வழங்கப்பட்டது. ஆனால் எஞ்சிய 21 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஒரே சீரான அகவிலைப்படி என்ற நிலை இல்லாமல் 38 விழுக்காட்டிற்கு குறைவான அகவிலைப்படி வழங்கப்பட்டது. எனவே, ஆவின் பணியாளர்கள் அனைவருக்கும் ஒரே சீரான அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று அமைச்சர் உத்தர வின்படி அனைத்து மாவட்ட ஒன்றி யங்களில் பணியாற்றும் பணியாளர்க ளுக்கு அகவிலைப்படி 38 விழுக்காடு ஆக உயர்த்தி சமன் செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைத்து ஊழியர்களுக்கும் சமமான அகவிலைப்படி என்ற நிலை உருவாகி உள்ளது. இது பணியாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள் ளது. இதன் மூலம் 1761 பணியாளர்கள் பயன் பெறுவார்கள். ஆண்டொன்றுக்கு 3,18,60,948 ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். ஆவின் நிர்வாகம் சார்பில் பால் உற்பத்தி யாளர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.