மதுரை:
மத்திய அரசின் நேரடி நிதிநிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் வருமானவரித்துறையில் உள்ள 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளநிலை உதவியாளர், முதுநிலை உதவியாளர், டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர் பணியிடங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது. நாடு முழுவதும் 20 ஆண்டுகளாக பணியாற்றும் தினக்கூலி தொழிலாளர் களை நிரந்தரப்படுத்த வேண்டும். பதவி உயர்வை உரியகாலத்தில் வழங்க வேண் டும், ஏழாவது ஊதியக் குழுபரிந்துரையில் உள்ள குறைகளை களைய வேண்டுமென்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் வருமானவரித்துறை அலுவலர்கள், ஊழியர்கள்வியாழனன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
மதுரை பீ.பீ.குளத்தில் உள்ள மதுரை வட்டார அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அலுவலர் சங்க கிளைச் செயலாளர் கோவர்த்தனன், ஊழியர் சங்க அமைப்புச் செயலாளர்ஷியாம்நாத், சரக செயலாளர் ராம்குமார், சுரேஷ் கண் ணன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.