tamilnadu

img

நாட்டிலேயே முதன்முறையாக பெண் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் திறப்பு

சென்னை, ஆக. 10- சிறைச்சாலைகள் சிறைவாசி களைச் சீர்திருத்தவே அன்றி  தண்டிப்பதற்கு அல்ல என்ற  வாசகத்தை அடிக்கடி படித்திருப் போம்… கேட்டிருப்போம்… ஆனால் அது வெறும் வார்த்தை களாக மட்டும் இருந்துவிடக் கூடாது என்று இன்றைய அரசு சிறைவாசிகளுக்காக பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து வரு கிறது.  கைதிகளை நல்வழிப்படுத் தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சிறைத்துறை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2018ஆம் ஆண்டு கைதிகளுக்கான பெட் ரோல் பங்க், சென்னை மத்திய  புழல் சிறையில் முதல் முறையாக  திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி, வேலூர்,  கோவை உள்ளிட்ட இடங்களி லும் சிறைத் துறை சார்பில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப் பட்டன. இந்த பங்க்குகளை தற் போது ஆண் கைதிகள் இயக்கி வருகின்றனர். இந்த பெட்ரோல் பங்க் மூலம் சிறைத் துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், கைதிகளும் மாத வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில், பெண் சிறை வாசிகளும் எதற்கும் சளைத்த வர்கள் அல்ல என்பதை நிரூபிக் கும் வகையிலும், அவர்களையும் ஊக்கப்படுத்தி நல்வழிப்படுத் தும் வகையிலும், அவர்களுக் கும் பெட்ரோல் பங்க் திறக்க சிறைத்துறை முடிவு செய்தது.

அதன்படி மத்திய புழல் சிறை  வளாகத்தில் பெண்கள் தனிச் சிறை அருகே ரூ. 1.92 கோடி மதிப்பில் 1,170 சதுர மீட்டர் பரப் பளவில் மற்றொரு பெட்ரோல் பங்க் கட்ட முடிவு செய்து, அதன் படி அதிநவீன தொழில்நுட்பங் களுடன் பீரீடம் பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்கான பணி கள் முழுமையாக முடிக்கப்பட்டு வியாழனன்று (ஆக. 10) திறக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன் முறையாக பெண் சிறைவாசிகள் நடத்தும் இந்த பெட்ரோல் நிரப் பும் நிலையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்து, பெண் சிறைவாசிகளை பாராட்டி பரிசளித்தார். பின்னர் அமைச்சர் ரகு பதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ரூ.1 கோடியே 92  லட்சம் மதிப்பில் உருவாக்கப் பட்டுள்ள இந்த பெட்ரோல் பங்க்கில் சூரிய ஒளி மின் வசதி,  சிசிடிவி கண்காணிப்பு கேமரா  உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் திறக்கப் பட்டுள்ளதாகவும், மேலும் கூடுதலாக மதுரை, திருச்சி உள்ளிட்டு 5 இடங்களில் பெட் ரோல் பங்குகள் நிறுவப்படும் என்று தெரிவித்தார்.

தற்போது பெண் சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் ரூ.6 ஆயிரம் மாதச் சம்பளம், பத்தாயிரம் ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். இதன் மூலம் சிறையில் இருந்த படியே அவர்களின் குடும்பத் திற்கு மாத வருமானம் அளித்து சிறையில் இருந்து வெளியே வரும் போது நல்ல தொழிலை தொடங்க அவர்களுக்கு வாய்ப்பாக இருக்கும் என்றார். ஷிப்ட் முறையில் வேலை முழுக்க முழுக்க அந்த பெட்ரோல் நிலையத்தில் காலை  நேரத்தில் பெண் சிறைவாசிகள் மட்டுமே பணியமர்த்தப்படுவர். மொத்தம் இரண்டு ஷிப்ட் வாரி யாக பணிகள் பிரிக்கப்பட்டு, காலை நேரத்தில் முதல் ஷிப்டில்  20 பெண் கைதிகளும், மதியம் வரக்கூடிய இரண்டாவது ஷிப்டில் 20 பெண் கைதிகளும் என மொத்தம் 40 பெண் கைதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இரவு நேரத்தில் வழக்கம் போல அந்த பெட்ரோல் நிலையத்தில் 20 ஆண்கள் பணி யில் இருப்பார்கள் என கூறப்படு கிறது. அதேபோல் இந்த பெட்ரோல் பங்கின் ஒரு பகுதி யில் கைதிகள் தயாரிக்கும் பொருள்களும் விற்பனை செய்யப்படும் என்பது மற்றொரு  சிறப்பம்சமாகும்.