இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திங்களன்று தில்லியில் உள்ள காந்தி தர்ஷனில் மகாத்மா காந்தியின் 12 அடி உயரச்சிலை மற்றும் காந்தி வாடிகாவையும் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் பேசிய குடியரசுத் தலைவர்,”மகாத்மா காந்தி உலக சமுதாயம் முழுமைக்கும் ஒரு வரப்பிரசாதம். புத்தகங்கள், திரைப்படங்கள், கருத்தரங்குகள், கேலிச்சித்திரங்கள் மற்றும் பிற ஊடகங்கள் மூலம் காந்திஜியின் வாழ்க்கை போதனைகளைப் பற்றி இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் காந்திஜியின் கனவுகளின் இந்தியாவைக் கட்டமைப்பதில் அவர்கள் கணிசமான பங்களிப்பை வழங்க முடியும்” என அவர் கூறினார்.