அமெரிக்கர்கள் கிறிஸ்துமஸ் விடு முறை காலத்தை தங்கள் குடும்பத் தினருடன் கொண்டாடிக் கொண் டுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வில் குழந்தைகள் கிறிஸ்துமஸ் நாடகங் களை பள்ளிகளில் மும்முரமாக ஒத்திகை பார்த்து வருகின்றனர். “இயேசுநாதர் பேசி னால் அவர் என்ன பேசுவார்? ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்?” என்பது தாயே உனக்காக திரைப்படத்தில் கே வி மஹாதேவன் இசையமிப்பில் பின்னணி பாடகி பி வசந்தாவின் குரலில் ஒலிக்கும் கவி ஞர் கண்ணதாசனின் வரிகள் ஆகும். கிறிஸ்துவின் பிறப்பிடமாக மதிக்கப்படும் பெத்லகேம் நகரின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது, “இயேசுநாதர் இன்று பிறந் தால் எங்கு பிறப்பார்?” என்ற வரிகளை மனதில் ஓடச் செய்கிறது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் பெத்லகேம் நகரம் பல்லா யிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும். பிரம்மாண்டமான கிறிஸ்து மஸ் மரம், ஊர்வலங்கள், மத வழிபாட்டு கொண்டாட்டங்கள் என கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டி ருக்கும். ஆனால் இந்த ஆண்டோ, இவை எதுவுமின்றி அந்நகரின் தெருக்களும், முற் றங்களும் ஆளரவமின்றி வெறிச்சோடிப் போயுள்ளன. அன்பு, இரக்கம், ஒடுக்கப் பட்டோருக்கான அக்கறை என அனைத்துக் கும் பெயர் போன அந்த புனித பூமியில், இஸ்ரேலிய படைகள் மற்றும் ஆயுதமேந் திய குடியேற்றக்காரர்களின் துப்பாக்கிக்கு பாலஸ்தீனர்கள் அன்றாடம் அஞ்சி நடுங்கி வாழ்கின்றனர். இந்த ஆண்டு மட்டும் 69 குழந்தைகள் உட்பட 271 பாலஸ்தீனியர்கள் மேற்கு கரையில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர், இது இரண்டாவது இன்டிபாஃடாவிற்கு (28.9.2000 -8.2.2005) பிறகு ஏற்படும் அதிக உயிரிழப்புகள் ஆகும் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளின் ஆணையம் தெரி விக்கிறது.
மேற்கு கரை நகரமான ஜெனெனில் இஸ்ரேலிய பீரங்கிகள் நடத்திய தாக்கு தலால் அங்குள்ள பாலஸ்தீனர்கள் வீடு களுக்குள் மறைந்து வாழ்கின்றனர். அங் குள்ள அகதிகள் முகாம்கள் கூட ட்ரோன் களால் குறி வைக்கப்பட்டு, தெருக்களை கிழிக்கும் கவசம் அணிந்த புல்டோசர் களால் மீண்டும் மீண்டும் படையெடுக்கப் பட்டன. அக்டோபர் 7க்கு பிறகு இன்று வரை ஜெனினில் மட்டும் 58 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் இஸ்ரேலிய இராணுவம் ஜெனின் நகரத்தின் புகழ்பெற்ற கலாச்சார நிறுவனமான ப்ஃரீடம் தியேட்டர் என்ற திரையரங்குக்குள் நுழைந்து அதை சூறையாடியுள்ளது. அங்கி ருந்த உபகரணங்களை அடித்து நொறுக்கி, கணினிகளைக் கைப்பற்றி, அலுவலக ஊழி யர்களைத் தாக்கியுள்ளது. திரையரங்கின் பொது மேலாளர் முஸ்தபா மற்றும் கலை இயக்குனரான அஹமத் தோபாசி ஆகி யோரை வீடுகளுக்குள் புகுந்து அடித்து, கை விலங்கிட்டு, கண்களை கட்டி கடத்திச் சென்றுள்ளனர். திரையரங்கின் இணை இயக்குனரான ஜோலா பாரடி இதனை கலாச்சார இனப் படுகொலையின் வடி வம் என்று நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி யில் விவரிக்கிறார்.
இவ்வாறாக இன்றைக்கு பெத்லகேம் மில் இருள், சோகம், கண்ணீர் மற்றும் வேதனை கவிழ்ந்துள்ளது. அக்டோபர் 7 முதல் இஸ்ரேலின் நிர்வாக தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் எந்த வித குற்றமும் இழைக்கா மலே ஏராளமான மக்கள் சுற்றி வளைக்கப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜெருசலேமில் உள்ள குருமார்கள் மற்றும் தேவாலயங்களின் தலைவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங் களை ரத்து செய்வதாக அறிவித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பிறப்பிட தேவாலயமும் அதன் கிறிஸ்மஸ் பண் டிகை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது. கண்களை குளிர்விக்கும் வழக்கமான இயேசு பிறப்பின் காட்சிக்கு பதிலாக, தேவா லயத்தின் உள்ளே இருந்த இடிபாடுகளின் மேல் குழந்தை இயேசுவின் சிலை வைக் கப்பட்டுள்ளது. தேவாலயத்தின் போதகர் முந்தர் ஐசக் தனது வழக்கமான ஞாயிற்றுக்கிழமை பிர சங்கத்தில், “இந்த ஆண்டில் நம் நாட்டில் ஏற்பட்ட மரணம், அழிவு மற்றும் இடிபாடு கள் காரணமாக “மகிமையின் ராஜாவை” நாம் இப்படித்தான் வரவேற்கிறோம். துன் பத்தில் அவதியுறும் ஒரு மனிதரோடு எப்போ தும் குழந்தை இயேசு இருக்கிறார் என்பதே கிறிஸ்துமஸ் என்பதாகும். இன்று அவர் பிறந்திருந்தால் இடிபாடுகளுக்கு அடியில் தான் பிறந்திருப்பார். இடிபாடுகளுக்கு அடி யில் சிக்கி கொல்லப்பட்டு வெளியே இழுக்கப்படும் ஒவ்வொரு குழந்தையிலும் இயேசுவின் உருவத்தை பார்க்க நான் உங்களை அழைக்கிறேன். ஆம், கிறிஸ்து மஸ் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகின்றன. ஆனால் கிறிஸ்து மஸ் பண்டிகையே ரத்து செய்யப்பட வில்லை அதை ரத்து செய்யவும் மாட்டோம். ஏனெனில் இயேசுவின் பிறப்பு நம் நம் பிக்கை. இயேசுவே நம் நம்பிக்கை” என கூறியுள்ளார். ஆக, இந்த ஆண்டு கிறிஸ்துவின் தேசத் தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இல்லை.