tamilnadu

img

கோவில்பட்டி நகராட்சி வார்டுகளில் உ. வாசுகி பிரச்சாரம்

தூத்துக்குடி, பிப்.11 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 31, 27, 18, 6, 10 ஆகிய 5 வார்டுகளில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளியன்று சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி  பிரச்சாரம் மேற்கொண்டார். கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 31ஆவது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் கே.சீனிவாசனுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி வீடு வீடாகச் சென்று பொது மக்களை சந்திந்து வாக்குகள் சேகரித்தார். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ரசல், அப்பாதுரை, கோவில்பட்டி ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன் மற்றும் கூட்டணி  கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து கோவில் பட்டி நகராட்சி 27வது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் எல்பி ஜோதி பாசு, 18 வதுவார்டு விஜயா, 6 வது வார்டுமுத்துராஜ், 10 வார்டு முத்து லட்சுமி, ஆகியோரை சந்தித்து தேர்தலில் வெற்றிபெறுவதுதொடர்பாக வும், தேர்தல் பணிகள் குறித்தும்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  பின்னர் திமுக கோவில்பட்டி நகர செயலாளர் கருணாநிதியை சந்தித்து கோவில்பட்டி நகராட்சி தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் கே. பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல், அப்பாதுரை, ரவீந்திரன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.