tamilnadu

img

கேரளத்தில் ஒரே நாளில் 1078 பேருக்கு கோவிட் தொடர்பு மூலம் நோய் தொற்று 798 பேருக்கு

திருவனந்தபுரம், ஜூலை 24- கேரளத்தில் வியாழனன்று 1078 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. 798 பேருக்கு தொடர்பு மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் நோய்  தொற்றிடம் அறியாதோர் 65 பேர் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். வியாழனன்று கோவிட் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்க ளிடம் மேலும் கூறியதாவது: ஒரே நாளில்  வியாழனன்று 5 பேர் உயிரிழந்தனர். குண மடைந்தோர் 272. வெளிநாடுகளில் இருந்து கேரளத்துக்கு வந்தோர் 87. இதர  மாநிலங்க ளில் இருந்து வந்தோர் 109. இதுவரை 16110 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. வெளி நாடுகளில் இருந்து வந்தோர் 104 வெளி மாநிலங்களில் இருந்து வந்தோர் 115 பேர். வியாழனன்று 432 பேர் குண மடைந்தனர். மாநிலத்தில் 428 ஹாட்ஸ்பாட்டுகள் உள்ளன. திருவனந்தபுரத்தில் நோயாளிகள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. வியாழனன்று நோய் கண்டறியப்பட்ட 222 பேரில் 100 பேர் தொடர்பு மூலம் நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள். இதில் 16 பேர் நோய் தொற்றிடம் அறியாதவர்கள். திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் சுகாதார ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள் நோய் தொற்று க்கு உள்ளாகினர். சட்டமன்ற உறுப்பினர்கள் சுகாதார கண்காணிப்பில் உள்ளனர். கடற்கரை பகுதிகள் உட்பட மோசமான சூழல்நிலை ஏற்பட்டதால் மீன்பிடித்தலுக்கு ஜூலை 29 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வண்டானம் அரசு டிடி கல்லூரியில் சிகிச்சை யில் இருந்த ஒருவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து 9 மருத்துவர்க ளுக்கும் 15 ஊழியர்களும் கண்காணிப்பில் உள்ளனர் என முதல்வர் தெரிவித்தார்.