திருவனந்தபுரம், பிப்.24- கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், பதவியேற்ற நான்கு ஆண்டுகளில், அரசு கருவூலத்தில் இருந்து, 44.87 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். கேரளாவுக்கு வெளியே அதிக நேரத்தை செல விடும் ஆளுநரின் பயணச் செலவு ஒன்றரை கோடி ரூபாயை தாண்டியுள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் ராஜ்பவனுக்கு இவ்வளவு ரூபாய் செலவு செய்ததில்லை. ஒன்றிய பாஜக அரசு, மாநிலத்தை நிதி ரீதியாக நசுக்கும் வேளையில், ஆளுநரின் இந்த அடாவடித்தனம் நிகழ்ந்துள்ளது. மாநில அரசு வீண் செலவு செய்வதாக குற்றம் சாட்டிய ஆளுநர், சொந்த செலவை கட்டுப்படுத்த தயாராக இல்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆவணங்களில் இருந்து தெரிகிறது. திட்ட நிதியின் கீழ் அனுமதிக்கப்பட்டதை விட ஆளுநரின் செலவு அதிகமாக உள்ளது. ஏற்கனவே இருந்த காரை மாற்றி புதிய பென்ஸ் கார் வாங்க 85.12 லட்சம் ரூபாய் செல விடப்பட்டது. பயணச் செலவுகள், அன்றாடச் செலவுகள் மட்டுமின்றி கருவூலத்தில் இருந்து ரூ.71.99 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. பொறுப்புக்கு வந்த ஓராண்டில் இது ரூ.8.5 லட்சமாக இருந்தது, ஆனால் தற்போது ரூ.25 லட்சமாக உயர்ந்துள்ளது. பயணச் செலவாக ரூ.1.6 கோடி பெறப்பட்டது. 2019 ஆம் ஆண்டில், அவர் பொறுப்பேற்ற போது, பயணச் செலவு ரூ. 38.4 லட்சமாக இருந்தது. தற்போது இது ரூ.72.27 லட்சமாக உள்ளது. முந்தைய ஆளுநராக இருந்த பி.சதாசிவம் ஐந்தாண்டுகளை முடித்துவிட்டு திரும்பியபோது ராஜ்பவ னின் மொத்த செலவு ரூ.33 கோடி. சதாசிவம் பயணத் திற்காக ரூ.1.04 கோடியும், நன்கொடையாக ரூ.19.53 லட்சமும் செலவு செய்துள்ளார்.