tamilnadu

உலகச் செய்திகள்

2021 ஆம் ஆண்டில் தங்கள் நாட்டின் பண வீக்கம் 3.1 விழுக்காடாக இருக்கும் என்று ஜெர்மனியின் மத்திய புள்ளிவிபரத்துறை அலு வலகம் கூறியுள்ளது. பொதுவாக இது விலை உயர்வின் எதிரொலி என்றாலும், 2020 ஆம் ஆண்டில் பொருட்களின் விலைகள் சரிந்திருந்ததே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கிறார்கள். வெப்பமயமாதல் பிரச்சனையை எதிர்கொள்ள சில பொருட்கள் மீது  வரி விதித்ததும் இதற்குக் காரணம் என்றாலும், மற்ற மாதங்களை விட டிசம்பரில் பெருமளவு அதிகரித்தது கவலையளிக்கிறது என்கிறார்கள்.

பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை நுண்ணறிவு கொண்டவர்களாக மாற்றும் உத்தி யாக, வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் ஏற்பாட்டை வட கொரிய அரசு செய்துள்ளது. இணையவழி வகுப்புக ளோடு, படித்தவற்றை செயல்படுத்திப் பார்க்க பணியி டங்களிலேயே அதற்கான வசதிகளை ஏற்படுத்தியி ருக்கிறார்கள். தற்போது, வட கொரியா முழுவதும் 1 லட்சம் பேர் இந்தத் திட்டத்தின் கீழ் வேலை பார்த்துக் கொண்டே, தங்கள் நுண்ணறிவை வளர்க்கும் வகையிலான ஆய்வுப் பணிகளையும் செய்கிறார்கள்.

2020 ஆம் ஆண்டில் கலகம் மூலமாக மாலி யில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம் தேர்தல் நடத்துவதை மீண்டும் தள்ளிப் போட்டி ருக்கிறது. இதனால் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள 15 நாடுகள் சேர்ந்து அமைத்துள்ள ஈகோவாஸ் என்ற அமைப்பு, பல்வேறு தடைகளை அறிவித்துள்ளது. விரைவில் தேர்தலை நடத்துகிறோம் என்று அளித்த வாக்குறுதியை மாலி ராணுவம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்தக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.