1947இல் குண்டூசிகூட செய்ய முடியாத நாடு. உள்நாட்டு உற்பத்தி ஒரு புள்ளிக்கும் கீழே. பசியும், பஞ்சமும், பெருந்தொற்று நோய்களும் நிரந்தரமாக இம்மண்ணில் குடியிருந்த காலம். குடிநீர் வசதி, சாலைகள், மருத்துவமனைகள், கல்வி நிலை யங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பெரும் தொழிற்சாலைகள் என எவ்வித அடிப் படை வளர்ச்சிக் குறியீடுகளும் இல்லாத காலம். சமூக நீதி, மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், பெண்ணுரிமை, பாலின சமத்துவம், பேச்சுரிமை, எழுத்துரிமை, வழிபாட்டு உரிமை, கருத்துச் சுதந்திரம் என்று எதைப்பற்றியும் அறியாத ஜனங்கள். வெந்ததை தின்போம், விதியழைத்தால் சாவோம் என்று வாழ்ந்த மக்களுக்கு அரசியல் சுதந்திரத்தை பெற்றுத்தந்தனர் காந்தி, நேரு, காமராஜ் போன்ற தேசியத் தலைவர்கள். பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தினர். சமூக நீதிக்கான பெரும் போராட்டங்களை முன்னெடுத்த தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற திராவிட இயக்கத் தலைவர்கள் சமூக சுதந்திரத்திற்கான அடித்தளத்தை அமைத்தனர். ஏ.கே.கோபாலன், இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஜீவா, ஜோதிபாசு, கல்யாணசுந்தரம் போன்ற பொதுவுடமை இயக்கத் தலைவர்கள் அடித்தட்டு மக்கள், விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் பஞ் சாலைத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளுக் காகப் போராடி அவர்களுக்கு சட்டப்பூர்வமான பல உரிமைகளைப் பெற்றுத் தந்தனர். அன்னை இந்திரா காந்தி இந்தியாவை ஜனநாயக, சோசலிச, மதச்சார்பற்ற, இறையாண்மை உள்ள குடியரசாக அறிவித்தார். உலகின் மிகப்பெரிய செயல்படும் ஜனநாயக மாக மலர்ந்தோம். வங்கிகளை தேசியமயமாக்கி னோம். பிரம்மாண்டமான பல பொதுத்துறை நிறு வனங்களை உருவாக்கினோம். தமிழ்நாடு சமூக நீதிக்கான கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டை இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தி யது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உணவு, கல்வி, வேலை வாய்ப்புகளுக்கான உரிமை களை சட்டப்பூர்வமான உரிமைகளாக அறி வித்தது. உற்பத்தியைப் பெருக்கி வேலைவாய்ப்பு களை அதிகப்படுத்தினோம். உலகமே நம்மை வியப்புடன் பார்த்தது.
மக்களை மட்டுமே முன்னிலைப்படுத்திய தியாகம்
தேசிய இயக்கமும், திராவிட இயக்கமும், பொதுவுடமை இயக்கமும் சில கொள்கைகளில் மாறுபட்டிருந்தாலும் சமூக ஒற்றுமையிலும், சமூக நீதியிலும், அடித்தட்டு மக்களுக்கான பொரு ளாதாரப் பாதுகாப்பிலும் ஒத்த கருத்திசைவு கொண்டிருந்தனர். இந்த மாபெரும் இயக்கங்களின் தலை வர்கள் தங்களை முன்னிறுத்தாமல் நாட்டை யும், மக்களையும் மட்டுமே முன்னிலைப்படுத்தி தியாக வாழ்வு வாழ்ந்தனர். கருத்து வேறுபாடு களையும், கொள்கை முரண்பாடுகளையும் தனி நபர் விருப்பு வெறுப்புகளாக ஒருநாளும் கருத வில்லை. கொள்கைகளிலும், கருத்தியல்களி லும் வேறுபட்டு ஒரே தளத்தில் பயணிக்கும் உரி மைகளை கொண்டாடினார்கள். உரையாடல்கள் மூலம் மற்றவர்களின் பார்வைகளில் இருக்கும் நியாயங்களை புரிந்து கொள்ள ஆத்மார்த்தமாக முயற்சித்தனர். அந்தப் பார்வைகளில், அணுகு முறைகளில் நியாயங்கள் இருந்தால் அவை களை உவகையுடன் ஏற்றுக்கொண்டனர். ஒருவர், மற்றொருவரின் தியாகங்களையும் உழைப்பையும் மதித்தனர். இப்படிப்பட்ட தலைவர்களாலும், அவர்கள் தலைமையேற்று நடத்திய அரசியல் இயக்கங் களாலும் வழிநடத்தப்பட்ட இந்தியா ஜனநாயகப் பாதையில் வெற்றி நடைபோட்டு, பெரும் முன் னேற்றங்களைக் கண்டது. குண்டூசி கூட செய்ய இயலாத நிலையில் இருந்த பாரதம் விண்ணில் செயற்கைக்கோள்களை ஏவியது. ஐஐடிகள், ஐஐஎம்கள், ஐஐஎஸ்சி மற்றும் ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் உருவாகின.
252 பொதுத்துறை நிறுவனங்கள்
ஆயுள் காப்பீட்டுக் கழகம், ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில், பாரத் ஹெவி எலக்டிரிக்கல்ஸ், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் போன்ற 252 பொதுத்துறை நிறுவனங்கள் உரு வாக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பட்டியல் இனமக்கள், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையின மக்கள் வேலை வாய்ப்பு களைப் பெற்றனர். மொழிவாரி மாநிலங்கள் உரு வான பின்னர் மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு அடிப்படை வசதிகளைப் பெருக்கினர். முதலீடுகளை ஈர்த்தனர்.
தென் மாநிலங்களின் முன்னேற்றம்
வடஇந்திய மாநிலங்கள் சாதி மத மோதல் களில் ஈடுபட்டு முன்னேற்றப்பாதைகளில் பய ணிக்கத் தவறிய காலங்களில் தமிழ்நாடு உட்பட்ட தென்மாநிலங்கள் வளர்ச்சியிலும், முன்னேற்றத் திலும் கவனம் செலுத்தின. இந்தியாவின் தனிநபர் வருமானம் வேகமாக வளர்ந்தது. பொருளாதார உற்பத்தி கூடியது. ஏற்றுமதி பெருகியது. அந்நியச் செலாவணி இருப்பு அதிகரித்தது. அரசு நிர்வாகம் தனக்கு விதிக்கப்பட்ட அதிகார எல்லைகளை கடந்த வேளைகளிலும், அதிகார வர்க்கம் எதேச்சதிகாரமாக நடக்க முற்பட்ட வேளைகளிலும், தனிமனித உரிமைகள் பாதிக்கப் பட்ட நேரங்களிலும் நமது அரசியல் சாசன சட்டம் உருவாக்கிய நாடாளுமன்றங்கள், சட்ட மன்றங்கள், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங் கள், தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகள் தலையிட்டு, தவறுகளை சுட்டிக் காட்டி தகுந்த தீர்வுகளை வழங்கி வந்தன.
கருநாகம் குடிவந்தது
கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிவந்ததுபோல் மோடியின் தலைமையிலான பாஜக அரசு, ஆட்சிக்கு வந்தபின் நாம் உரு வாக்கி வைத்துள்ள நம் லட்சிய தேசத்தின் ஒவ்வொரு கூறையும் சிதைக்க முற்பட்டுள்ளது. ஜனநாயகத்தை பெரும்பான்மைவாதமாக மாற்ற முயற்சிக்கிறது. மொழியாலும், மதத்தா லும், மாநிலங்களாலும் பிரிந்திருந்த போதிலும் தேசத்தால் ஒன்றுபட்டிருந்த மக்களை மதம், சாதி, மொழி அடிப்படையில் பிரித்து வைக்கிறது. இட ஒதுக்கீடு, தொழிலாளர் நலச் சட்டங்கள் போன்ற முன்னெடுப்புகளால் அடித்தட்டு மக்கள் பெற்றுள்ள உரிமைகளை பறித்து அவர்களை ஆதிக்க சாதியினரிடமும், கார்ப்பரேட் பெருமுத லாளிகளிடமும் மீண்டும் அடிமைகளாக்க முயற்சிக்கிறது. ஏழைகளிடமிருந்து கல்வியைப் பறிக்க முயற்சிக்கிறது. தேச உடமையாக்கப்பட்ட வங்கிகளில் இருக்கும் பொதுமக்களின் சேமிப்பை பெரும் முதலாளிகளுக்கு வராக்கட னாக வாரிவழங்குகின்றது. இயற்கை வளங் களை பன்னாட்டுக் கம்பெனிகள் கொள்ளையிட திறந்துவிடுகின்றது. பொதுத்துறை, நிறுவனங் களை தனக்கு வேண்டிய பெருமுதலாளிகளுக்கு மலிவு விலையில் தாரைவார்க்கின்றது. மதச்சிறுபான்மையினரை பெரும்பான்மை மக்களுக்கு எதிரிகளாகக் கட்டமைக்கிறது. ஜன நாயகத்தின் நான்காவது தூண் என்றழைக்கப் படும் செய்தி ஊடகங்களை முழுமையாக முடக்கிப்போட்டு, உண்மை நிலவரங்கள் மக்க ளுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்கிறது.
மாநிலங்களை முடக்குகிறது
கூட்டாட்சித் தத்துவத்தின் ஆன்மாவைக் கொன்று, பாஜக அல்லாத மாநில அரசுகளை சித்ரவதை செய்து, அவற்றின் நிர்வாகத்தை முடக்கி, மாநில அரசுகளை நகர்மன்றங்களை விட கேவலமாக நடத்துகிறது. மக்களது கடுமை யான உழைப்பாலும், அம்மாநில அரசுகளின் சிறந்த நிர்வாகத்தினா லும் மாநில உற் பத்தித் திறனைக் கூட்டி வரி வருவாயினைப் பெருக்கிய தென்மாநிலங்களுக்கு ஒன்றிய வரித் தொகுப்பிலிருந்து அவர்களுக்கு தகுதி யான நிதிப் பங்கீட்டை வழங்காமல் தங்களது அரசியல் விளைநிலங்களாக இருக்கும் சில வட இந்திய மாநிலங்களுக்கு வரை முறை யில்லாமல் வாரி வழங்குகிறது. வரிப் பங்கீட்டில் மாநிலங்களுக்கு உரிய பங்கினை வழங்காத வகையில் வரிகளை செஸ் மற்றும் சர்சார்ஜ் கட்ட ணங்களாக லட்சக்கணக்கான கோடிகளை வசூ லித்து அதனது விருப்பத்திற் கேற்ப செலவழிக்கிறது.
எத்தனை எத்தனை அட்டூழியங்கள்
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம், பல்கலைக் கழகங்கள், லோக்பால், மனித உரிமை ஆணையம், திரைப்படத் தணிக்கைத்துறை, வருமான வரித்துறை, வரு வாய் புலனாய்வுத் துறை, சிபிஐ, தேசிய புல னாய்வு முகமை, வெளிநாட்டுத் தூதரகங்கள் என்று அனைத்து அரசு நிர்வாக அமைப்பு களிலும் தகுதியான நபர்களை நியமிக்காமல், தங்களது அரசியல் தத்துவங்களுக்கு நெருக்க மானவர்களையும், தங்களது பதவிகளில் நீடிப்பதற்கும், பதவி உயர்வுக்கும் எதையும் செய்யத்துணியும் மனச்சாட்சியற்றவர்களை நியமித்து ஊக்குவிக்குகிறது. தமிழ்நாடு உள்ளடக்கிய தென்மாநிலங்களில் ஏற்படும் ஒன்றிய அரசு நிறுவனங்களின் வேலைவாய்ப்பு களை தமிழ்நாடு இளைஞர்களிடம் இருந்து பறித்து பின்வாசல் வழியாக வடமாநில இளைஞர் களை பணியமர்த்துகிறது. மாற்றுச் சித்தாந்தங்களை உடையவர்களை யும், சுதந்திரமாகச் செயல்படும் ஊடகவியலா ளர்களையும், சமூக ஆர்வலர்களையும், தொண்டு நிறுவனங்களை நடத்துகின்றவர் களையும், பொய்வழக்குப் போட்டு பிணையில் வர முடியாத வழக்குகளில் சிக்கவைத்து, விசார ணையின்றி வருடக்கணக்கில் சிறையிலடைக்கிறது.
பாசிசப் பெரும்பான்மைவாதம்
மொத்தத்தில் நமது அரசியல் சாசன சட்டத்தை உயிரிழக்கச் செய்து, ஜனநாயகத்தை பாசிச பெரும்பான்மைவாதமாக மாற்றி, ஜன நாயக நிறுவனங்களை சிதைத்து நாம் போராடிப் பெற்ற ஜனநாயக குடியரசை ஒரு சர்வாதிகார அர சாக மாற்றும் முயற்சிகளில் ஒவ்வொரு நாளும் ஈடுபட்டு வருகின்றது. பல மதங்கள், பல மொழி கள், பல கலாச்சாரங்கள், பல இனக்குழுக்கள் இருந்தாலும் வேற்றுமைகளில் ஒற்றுமை கண்டு ஒரு பன்முகக் கலாச்சாரத்தை கொண்டாடும் நம்மிடம் ஒரு ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்க அனைத்து முனைகளிலும் முயன்றுவருகிறது. “ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் ”என்று நமது குடியரசின் ஆன்மாவைக் கொலை செய்ய திட்டமிடுகிறது. இந்திய அரசியலில் “ஒற்றைக் கட்சியின்” ஆட்சியை ஏற்படுத்த திட்டமிடுவதால் மற்ற ஜனநாயக இயக்கங்களை அழிக்க முற்படுகிறது. காங்கிரஸ் இல்லாத பாரதம், கம்யூனிஸ்ட்கள் இல்லாத இந்தியா, கழகங்கள் இல்லாத தமிழகம் என்று இந்த தேசத்தைக் கட்டமைத்த ஜனநாயக இயக்கங்கள் அனைத்தையும் ஒழித்துவிட்டு பாஜக கட்சியையும் இந்திய ஆட்சியையும் ஒரே அமைப்பின்கீழ் கொண்டுவர திட்டமிடுகிறது.
தேர்தல் பத்திர ஊழல்
தேர்தல் பத்திர நன்கொடைகள் பற்றிய தகவல்கள் இந்தியா மாபெரும் ஆபத்தினை நோக்கிப் பயணிக்கிறது என்பதினை நமக்கு உணர்த்தியுள்ளது சி.பி.ஐ. வருமான வரித்துறை, வருவாய் புலனாய்வுத் துறை என்ற பெரும் அதி காரங்களைக் கொண்ட அமைப்புகளை, இந்த நாட்டின் பெரும் பணக்காரர்கள் மீது ஏவி, மிரட்டி, சிறையிலடைத்து, சித்ரவதை செய்து தங்களது கட்சிக்கு எவ்வாறு தேர்தல் நிதியினைக் குவித்துள்ளார்கள் என்று நாம் அறிய வருகின்ற தகவல்கள் இந்தியாவின் ஆன்மாவையே கலங்கடித்துள்ளன. இவ்வாறு குவிக்கப்பட்ட பெரும் நிதியால் தேர்தல்கள் மூலம் நமது நாட்டின் உயிர் மூச்சான ஜனநாயகத்தைக் கொலை செய்ய அவர்கள் போட்டுள்ள திட்டத்தை முறி யடிக்க வேண்டும். “இந்தியா” கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுவதின் மூலமே அந்த பேரழிவைத் தடுத்து நிறுத்திட முடியும். அந்த வெற்றிக்கு தமிழகத்தின் பங்கு மகத்தானது.
இந்தியா கூட்டணியை அரியணை ஏற்றுவோம்!
விடுதலைப் போராட்ட வீரர்கள் கனவு கண்ட இந்தியாவைத் தக்க வைக்க இந்தியா கூட்டணியை அரியணையில் ஏற்ற வரும் நாடாளுமன்றத் தேர்தல் தரும் வாய்ப்பைத் தெளி வாக உறுதியாகப் பயன்படுத்திக் கொள்வோம் மதச்சார்பற்ற இந்தியாவை உத்தரவாதப்படுத்தும் ஒரே அணி “இந்தியா” கூட்டணி மட்டுமே.அதிமுக வும் அதிலிருந்து பிரிந்த கட்சிகளும், நாம் தமிழரும் இந்தத் தேர்தலில் புறம் தள்ளப்பட வேண்டியவை என்பதையும் உறுதியாக நெஞ்சில் நிறுத்துவோம். ஜனநாயகத்தையும், சமூக நீதியையும், மதச்சார்பின்மையும் மாநில உரிமைகளையும், ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வையும் கருத் தில் கொண்டு பாசிச, வகுப்புவாத, கார்ப்பரேட் பாஜக கூட்டணியையும், அதனோடு கள்ளக் கூட் டணியில் இருக்கும் அதிமுகவையும் தோற்கடிக்க தமிழக மக்கள் சபதமேற்க வேண்டும். இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பெருவாரியான வாக்கினை அளித்து வெற்றி பெறச் செய்ய தமிழக வாக்காளப் பெருமக்களை அன்புடன் வேண்டுகிறோம்.