மதுரை, டிச.27- இந்தி மொழி திணிப்பை “கல்வித் துறையின் மறுமலர்ச்சி” என்று கூறி யுள்ள ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்ட னம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அறிவியல்- தொழில் நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் “இந்தி சலகாகர் சமிதி” கூட்டத்தில் பேசும் போது இந்தித் திணிப்பை “கல்வித் துறையின் மறுமலர்ச்சி, மறு நிர்மா ணம்” என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ள தாக கூறியுள்ளார். அவரே மொழி மக் களை இணைப்பது, வலிய திணித்தால் ஒழிய அது பிரிக்காது என்றும் கூறியுள் ளார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆணை களுக்கு இணங்க இந்தி சல்காகர் சமிதி யின் கூட்டம் உரிய இடைவெளிகளில் கூடுகிறது. அளவிடத்தக்க, புலப்படத் தக்க முன்னேற்றங்களையும் எட்டு கிறது என்றும் தெரிவித்துள்ளார். ஒவ் வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இதன் துணைக் குழுக்கள் கூட வேண்டும் என்றும் கூறியுள்ளார். எல்லா அறிவியல் இதழ்கள், ஆவணங் களும் தரமான இந்தி மொழி பெயர்ப்பு செய்யப்பட வேண்டும், அதற்கு தேர்ந்த நிபுணர்களை பரிந்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மாநில மொழி களின் வளர்ச்சியையும் போகிற போக் கில் பேசியுள்ளார்.
அமைச்சகத்தின் உயர் அதிகாரி களை எல்லாம் பட்டியலிட்டு அவர்கள் எல்லாம் இந்தியில் பேசுவதையே விரும்புகிறார்கள், இந்தியில் வேலை செய்வதையும் ஊக்குவிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் பேச்சு எந்த அளவிற்கு ஒன்றிய அரசு இந்தித் திணிப்பில் முனைப்பு காட்டுகிறார்கள் என்பதற்கு சாட்சியம். மாநில மொழிகளின் வளர்ச்சி பற்றியும் பெயருக்கு சேர்த்துப் பேசுவது, வைக் கோல் கன்றுக் குட்டியை காட்டி பசுவை ஏமாற்றி பால் கறப்பது தவிர வேறொன் றுமில்லை. அமைச்சரே! உண்மையிலேயே உங்களுக்கு எல்லா இந்திய மொழி களையும் வளர்ப்பது என்றால் எட்டா வது அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளையும் அலுவல் மொழிகள் என அறிவியுங்களேன்.
இந்தி பரவல் “கல்வித் துறையின் மறுமலர்ச்சி, மறு நிர்மாணம்” என்று அமித்ஷா கூறியுள்ளதை அமைச்சர் வழி மொழிந்துள்ளார். யாருக்கு மறு மலர்ச்சி? யாருக்கு மறு நிர்மாணம்? இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிற வண்ணம் இந்திய மாநி லங்கள் ஏ, பி, சி என அலுவல் மொழி விதிகளில் வகைப்படுத்தப்பட்டுள் ளதே? எங்கு இந்தி கட்டாயம்? எங்கு கட்டாயமில்லை? எங்கு ஆங்கிலப் பயன்பாடு அவசியம்? என்றெல்லாம் அது பேசி இருக்கிறதே, அதை உங்கள் அரசு உணர்வுப்பூர்வமாக அமல் செய்கி றதா? இந்தியை மட்டுமே பேசுவது மறு நிர்மாணமா, தேசத்தின் பன்முகத் தன் மையை ஓரளவேனும் பிரதிபலிக்கிற அந்த அலுவல் மொழி விதிகளை உடைக்கிற செயலா? தமிழ்நாட்டுக்கு அந்த அலுவல் மொழிகள் பொருந்தாது என்ற சிறப்பான இடம் இருப்பது உங்க ளுக்கு தெரியாதா? வட கிழக்கு மாநிலங்களில் நியமிக் கப்பட்ட இந்தி ஆசிரியர்கள் தொடர வில்லை என்ற உண்மையை அமைச்சர் மறுக்கவில்லை. ஏன் தொடரவில்லை என்பதை யோசிக்க வேண்டாமா? வலி யத் திணித்தலின் விளைவு அல்லவா அது! அந்த மாநிலத்தின் இளைஞர்கள் சுற்றுலாத் துறையில் அதிகம் வேலை பார்ப்பதால் அவர்களுக்கு இந்தி பயன்படும் என்று தெரிவித்துள்ளார். அமைச்சரே! ஒரு மொழி தேவை என் றால் இயல்பாகவே அவர்கள் கற்றுக் கொள்வார்கள். எங்கள் சென்னை ரயில் நிலைய வாசலுக்கு வந்து பாருங்கள்! அங்கு இருக்கிற வாகன ஓட்டுனர்கள் இந்தி பயணிகளிடம் எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசுவதை பார்க்கலாம். நீங்களே ஒத்துக் கொள் கிற மாதிரி வடகிழக்கு மாநிலங்களில் நீங்கள் வாஜ்பாயி காலத்தில் நியமிக் கப்பட்ட ஆசிரியர்கள் அங்கு தொடரா விட்டாலும் அந்த மாநிலத்து இளைஞர் கள் சுற்றுலா துறைக்குள் நிறைய வந்து தானே இருக்கிறார்கள்! அனுபவங் களில் இருந்து சரியான படிப்பினை களை பெற வேண்டாமா? எப்படி தப்பா மல் தப்பான முடிவுகளுக்கே வரு கிறீர்கள்!
இந்தி அல்ல இந்தியா...
வேலையோடும், வருமானத்தோ டும் இணைக்கப்படும் போது மொழி தனது வளர்ச்சிக்கான பாதையை அதுவே அறிந்து கொள்கிறது என்று கூறுகிற அமைச்சரே! வேலை, வரு மானம் என்று சுருங்கி விடக் கூடியதல்ல மொழி! அது பண்பாட்டோடு இணைந் தது; உரிமை சார்ந்த உணர்வு அது. ‘மொழி இணைக்கும், பிரிக்காது அது திணிக்கப் பட்டாலொழிய’ என்ற உங்கள் வார்த்தைகளையே திரும்ப உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த உண்மையைத் தெரிந்தே திணிப்பது தான் உங்கள் அரசின் ஆணவம். அமைச்சரே, இந்தி அல்ல இந் தியா... இந்தியா என்பது மொழிப் பன் மைத்துவம் பூத்துக் குலுங்கும் தோட் டம். அறிவியலை, தொழில் நுட்பத்தை வளர்ப்பதே உங்கள் இலாகா... அதை உங்கள் அமைச்சகம் பார்க்கட்டும்! இந்தியை திணிக்க நினைப்பது அறி வியலும் அல்ல, அறிவார்ந்த செயலும் அல்ல. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.