tamilnadu

img

மின்சார சட்டத் திருத்தம் 2022-க்கு ஒன்றிய பாஜக அமைச்சரவை ஒப்புதல்

புதுதில்லி, ஜூலை 30- மின்சார சட்டத் திருத்தத்தால் ஏழை- எளிய மக்கள் மீது கட்டண உயர்வு திணிக்கப்படும். மாநிலங்களின் உரிமை கள் பறிக்கப்படும் எனக் கூறிய பொதுத்  துறை மற்றும் சேவைகளுக்கான மக்கள்  ஆணையத்தின் கருத்துக்களை அலட்சி யம் செய்து விட்டு மின்சாரச் சட்டத் திருத்தம் 2022-க்கு ஒன்றிய அரசு ஒப்பு தல் அளித்துவிட்டது. பிரபல கல்வியாளர்கள், சட்ட வல்லு நர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய  பொதுத்துறை மற்றும் சேவைகளுக் கான மக்கள் ஆணையம் 2022-ஆம்  ஆண்டுக்கான மின்சார (திருத்த) மசோ தாவை நிறைவேற்றக் கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது. பொதுத்துறை மற்றும் சேவை களுக்கான மக்கள் ஆணையத்தின் உறுப்பினர்களாக முன்னாள் மின்துறை  செயலாளர் இ.ஏ.எஸ். ஷர்மா, கேரள  முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக்,  திட்டக் கமிஷன் முன்னாள் உறுப்பினர் எஸ்.பி.சுக்லா, ஓய்வுபெற்ற ஜேஎன்யு பேராசிரியர் சி.பி. சந்திரசேகர், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உள் ளிட்ட பலர் உள்ளனர்.

இவர்கள், மின்சார திருத்த மசோதா (2022)- வின் தற்போதைய வடி வம், இந்தியாவின் கூட்டாட்சிக் கட்ட மைப்பின் மீது நடத்தும் தாக்குதலின் ஒரு பகுதி மட்டுமல்ல மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைக்கும் நடவ டிக்கை ஆகும் எனக் கூறியுள்ளனர். இதற்கிடையில் ஜூலை 27-ஆம் தேதியே ஒன்றிய அமைச்சரவை மசோ தாவுக்கு ஒப்புதல் அளித்ததாக இ.டி.நவ் (ET Now) செய்தி வெளியிட்டுள்ளது என  தி வயர் இணையதளம் தெரிவிக்கிறது. மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்துத் தில்லியில் ஓராண்டிற்கும் மேலாகப் போராட்டம் நடத்திய விவசாயிகள் இந்த மின்சார திருத்த மசோதாவை கைவிட வேண் டும் என வலியுறுத்தினர்.

விவசாயிகள், பொதுமக்கள், சிறு- குறு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தாமல் மின்சார சட்டத் திருத்த மசோ தாவைக் கொண்டுவர மாட்டோம் எனப் போராடிய விவசாயிகளிடம் ஒன்றிய அரசு உறுதியளித்தது. ஆனால், கொடுத்த  வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு விட்டது ஒன்றிய பாஜக அரசு. மக்கள் சந்திக்கும் நெருக்கடி ஒரு புறமிருந்தாலும், ஒன்றிய அரசின் மசோதா, மாநிலங்களின் நிதி நிலைமை யில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத் தும். மின் விநியோகம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்தாலும், 1996-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு இந்தத் துறை யை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற் கொண்டது. மின்சாரம் தொடர்பான அனைத்துக் கொள்கைகளும் ஒன்றிய அரசால் தான் வகுக்கப்படுகிறது. விநியோகப் பொறுப்பு மாநிலங்களுக்கு உள்ள தால் சம்பிரதாயத்திற்காக மாநில அரசு களை அழைத்துக் கூட்டம் நடத்து கிறது. போனால் போகிறதென்று ஆலோ சனையையும் கேட்கிறது. ஆனால், மாநில அரசுகள் கூறும் எந்த விஷ யங்களையும் ஒன்றிய அரசு மதிப்ப தில்லை, ஏற்றுக்கொள்வதும் இல்லை. ஒன்றிய அரசின் அடிமைகள் தான் மாநில அரசு என்ற நிலையை உரு வாக்கி வருகிறது. மின் கட்டமைப்பு மேம்பாடு, வளர்ச்சி, புதிய மின் திட்டங்  கள் ஆகியவற்றின் நிதித் தேவை களுக்கு ஒன்றிய அரசைச் சார்ந்து இருக்க வேண்டியதுள்ளதால் மாநில அரசுகள் வேறுவழியின்றி ஒன்றிய அர சுக்கு அடிபணியக்கூடிய நிலை உள்ளது. மின்சார திருத்தச் சட்டம் 2022, மாநில  அரசுகளின் அதிகாரங்களைக் கணிச மான அளவில் பறித்துத் தம்மிடம் குவித்  துக்கொண்டுள்ளது ஒன்றிய அரசு.