tamilnadu

img

கோவை கிணத்துக்கடவில் பத்திரிகையாளரை தாக்கிய சட்டவிரோத கல்குவாரி கும்பல்

கோயம்புத்தூர், மார்ச் 30- சட்டவிரோத கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்க சென்ற  ஊடகவியலாளர் பாலாஜியை தாக்கிய குண்டர்களை உடனடி யாக கைது செய்ய வேண்டும். தமிழக அரசு ஊடகவியலாளர்கள்  பக்கம் நிற்க வேண்டும். மேலும், பத்திரிகையாளர் பாதுகாப்பு மசோதா நடப்பு சட்டமன்ற கூட் டத்தொடரிலேயே கொண்டு வர  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை  நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்  டுள்ள அறிக்கை வருமாறு:  கோவை மாவட்டம் கிணத்துக்  கடவு  பகுதியில் சட்ட விரோதமாக  கல்குவாரிகள் செயல்பட்டு வரு வதாக கிடைத்த தகவலின் பேரில்  அங்கு செய்தி சேகரிக்க நியூஸ்  தமிழ் என்ற செய்தித் தொலைக் காட்சி குழுவினர் சென்றுள்ளனர். கல் குவாரி தொடர்பாக செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது ஒளிப்பதிவாளர் பாலாஜியை ஒரு  சமூக விரோத கும்பல் சூழ்ந்து கொண்டு படம் பிடிப்பதைத் தடுத்துள்ளது.

மேலும், செய்தியாளர் குழு வினரை அவதூறாகப் பேசி மிரட்டி யதுடன் ஒளிப்பதிவாளர் பாலாஜி யை சூழ்ந்து கொண்டு சரமாரி யாகத் தாக்கி காயப்படுத்தியுள்ள னர். மேலும் அவர் வைத்திருந்த ஒளிப்பதிவு கருவியையும் பறிக்க முயன்றிருக்கின்றனர். அப்போது நடைபெற்ற நிகழ்வு கள் நேரடியாக ஒளிபரப்பாகி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கனிம வள கொள்ளை கும்பலின் தாக்கு தலில் காயமடைந்த தொலைக் காட்சியின் ஒளிப்பதிவாளர் பாலாஜி, பொள்ளாச்சி அரசு மருத்  துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவிக்கு பிறகு கோவை அரசு  பொது மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். செய்தி சேகரிக்க சென்ற ஊடக வியலாளர் பாலாஜி மீதான இந்த  தாக்குதல் சம்பவம் வன்மையா கக் கண்டிக்கத்தக்கது. இதைக் கண்டித்து பத்திரிகையாளர் அமைப்புகள் இரண்டு நாட்களாக  போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றன. எனவே இந்த சம்ப வத்துக்கு காரணமானவர்கள் உட னடியாக கைது செய்யப்பட்டு கடு மையான நடவடிக்கைக்கு உள்  ளாக்கப்பட வேண்டும். தாக்கப் பட்ட பாலாஜிக்கு உரிய நிவார ணம் அரசுத் தரப்பில் வழங்கப்பட வேண்டும்.

கோவை மாவட்டம் கிணத்  துக்கடவு வட்டாரத்தில் இது போன்ற சட்ட விரோத கனிமவளக் கொள்ளையில் மிகப் பெரிய மாபியாக்கள் ஈடுபட்டிருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளி யாகி வருகின்றன. இந்த விவகா ரத்தில் உயர்மட்டக் குழு அமைத்து கனிமவளம் எடுப்பதற்கு முறை யான அனுமதி வழங்கப்பட்டுள் ளதா, அனுமதிக்கப்பட்ட அள வில்தான் கனிமவளம் எடுக்கப்படு கின்றதா என்று விசாரிக்கப்பட வேண்டும். அதேநேரம், நாட்டில்  ஊடக வியலாளர்கள் மீது தாக்குதல்  நடத்தப்படுவது தொடர்கதை யாகி வருகிறது. சர்வாதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பும் பத்தி ரிகையாளர்களை சில கட்சித்  தலைவர்களே இழிவுபடுத்தும் செயலும், அந்த அதிகார மையத்தை நோக்கிக் கேள்வி எழுப்பும் ஊடகவியலாளர்கள் வெளிப்படையாகவே மிரட்டப்படு வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்தி ரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு, ஜன நாயகத்தின் குரல்வளை நெரிக் கப்படும் நிலை ஏற்படுகிறது. பத்தி ரிகையாளர்கள் என்பவர்கள் சுதந்  திரமானவர்கள். தவறுகளை சுட்டிக் காட்டும் அவர்களை மிரட்டி தங்கள் வயப்படுத்தும் போக்கு நாட்டுக்கே ஆபத்தானது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு பத்திரிகையாளர்களின் பக்கம் நின்று அவர்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். எனவே இதுபோன்ற தாக்கு தல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அரசு ஊழி யர்கள், மருத்துவர்களுக்கு இருப்  பதைப் போன்ற பணியிட பாது காப்பு பத்திரிகையாளர்களுக்கும் அவசியமாகிறது. எனவே தமிழ்  நாட்டில் பணியாற்றும் பத்திரிகை யாளர்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு வழங்க வழிவகை செய்யும் வகையில் பத்திரிகை யாளர் பாதுகாப்பு சட்ட மசோதா வை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே கொண்டு வர அரசு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.