tamilnadu

img

‘எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் வரை இந்த செங்கலை திருப்பிக் கொடுக்க மாட்டேன்’

மதுரை, மார்ச் 24-  தென் மாவட்ட தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.  விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருமங்கலம் தேவர் சிலை அருகே உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை மாலை பிரச்சாரம் மேற்கொண்டார்.  அப்போது அவர் பேசுகையில், ‘‘2019-ஆம் ஆண்டு மதுரை வந்த பிரதமர் அன்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி விட்டு சென்றார். அந்த செங்கல் இன்னும் என்னிடம் உள்ளது. பத்திரமாக வைத்துள்ளேன். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் வரைக்கும் இந்த செங்கலை திருப்பிக் கொடுக்க மாட்டேன்’’ என்றார். கூட்டத்தில் திமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து போது கொண்டனர்.