tamilnadu

img

கலை மூலம் கருத்துக்களைச் சொல்கிறேன்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தைச் சேர்ந்தவர் ஜான்சி லக்ஷிலா (20). எம்எஸ்சி கணிதம் படித்து வருகிறார். கலைக்குழுவிற்கு வர ஊக்கமளித்தவர் களறி, முரசு கலைக்குழுக்களை வழி நடத்திய சதீஷ்குமார் தான் என்கிறார். எதிர்காலத்தில் பி.எச்.டி படிக்க வேண்டும். கல்வியோடு கலையையும் வளர்க்க வேண்டும். படித்துக் கொண்டிருப்பதால் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதற்கு வாய்ப்புக் கிடைக்காது. தமிழக அரசு நடத்திய கொரோனா விழிப்புணர்வு, தேர்தல் விழிப்புணர்வு, இல்லம் தேடி தமிழகம் ஆகிய கலை நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளேன். எனது தந்தை காய்கறி வியாபாரம் செய்கிறார். சமூகத்திற்கு நல்ல தகவல்களை கொண்டு சேர்ப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன் என்றார்.