tamilnadu

img

பிரதமரே, ஆட்சி நிர்வாகம் யாருக்காக?

திருவனந்தபுரம்/கண்ணூர், ஏப்.25- கேள்விகளுக்குப் பயந்து ஒளிந்து கொண்டிருந்த பிரதமருக்கு 100 கேள்விகளுடன் கேரளா முழுவதும்  மாவட்ட மையங்களில் லட்சக் கணக்கான மக்கள் அணிவகுத்து நின்றனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘இளைய இந்தியா’ இயக்கம் ஞாயி றன்று தொடங்கியது, பதில் தெரியாத கேள்விகளை மீண்டும் கேட்கும் முயற்சியாக இந்நிகழ்ச்சி அமைந்தது. உலகின் 121 நாடுகளைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட உலக ளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா  107ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது ஏன், பிரதமரின் ஒன்பதாண்டு பதவிக் காலத்தில் 2019இல் தான் செய்தியாளர் சந்திப்பு நடத்தப் பட்டது. மாவட்ட மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் பிரச்சாரத்தில், ஜனநாயக நாட்டின் பிரதமர் பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்பது ஏற்புடையதா, கேள்வி களுக்கு ஏன் பயப்படுகிறார். ஒன்றிய அரசுப் பணிகளில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் இருந்தும், அறிவிக்கப்படாத பணி நியமனத் தடை இளைஞர்களை வேலையின்மைக்கும், சுரண்டலுக்கும் தள்ளுவது ஏன்..? மதத்தின் அடிப் படையில் குடிமக்களை பிரிக்கும் என்பிஆர் வாபஸ் பெறப்படுமா..? விவசாயிகள் போராட்டத்தின் தீர்வு விதிமுறைகளை ஏன் அமல்படுத்த வில்லை? பேட்டி பத்தாவோ அல்லது பேட்டி பச்சாவோ திட்டம் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியதா..? மக்களின் நலனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றால், யாருக்காக அரசு? போன்ற 100 கேள்விகளை இளைஞர்கள் எழுப்பினர்.

திருவனந்தபுரத்தில் எல்.டி.எப் அமைப்பாளர் இ.பி.ஜெயராஜன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களில் திங்களன்று நடைபெற்றது. வய நாட்டில் செவ்வாயன்று இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வேலை எங்கே?   ஜனநாயகம் எங்கே?

ஜனநாயகம் எங்கே? கண்ணூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ‘யங் இந்தியா ஆஸ்க் தி பி.எம்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இளைஞர் பேரணியில் அரை லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர்.  வேலை எங்கே? ஜனநாயகம் எங்கே? என்னும் கேள்விகளை முழங்கி கண்ணூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக மைதானத்தில் கையில் பதாகை ஏந்தியபடி இளைஞர்கள் கடல் போல் அலைமோதினர். இளைஞர்கள் திரண்ட இடம் தவிர, நகரின் தெருக்களில் பிரதமரிடம் நூற்றுக்கணக்கான கேள்விகளுடன் வந்த இளைஞர்கள் நிரம்பி வழிந்தனர். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த மோடி அரசு நிரந்தர வேலை வாய்ப்பை ஒழித்துவிட்டு ஒப்பந்தத்தை மட்டும் ஊக்குவிப்பது ஏன் என்று கேட்டனர். கண்ணூரில் நடைபெற்ற இளை ஞர் கூட்டத்தை அகில இந்திய தலைவர் ஏ.ஏ.ரஹீம் தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் முஹம்மது அப்சல் தலைமை வகித்தார். மத்தியக் குழு உறுப்பினர் ஆர்.ராகுல் பேசினார். கொல்லத்தில் சிபிஐஎம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர், பத்தனம்திட்டாவில் அமைச் சர் வீணா ஜார்ஜ், கொச்சியில் அமைச்சர் பி.ராஜீவ், பாலக்காடு கோட்டா மைதானத்தில் டி.வை.எப்.ஐ.யின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஜெய்க் சி.தாமஸ், கோழிக்கோட்டில் அமைச்சர் பி.ஏ.முஹம்மது ரியாஸ், காசர்கோடு டி.ஒய்.எப்.ஐ. முன்னாள் மாநில தலைவர் எஸ்.சதீஷ், ஆலப்புழாவில் மாநிலச் செயலர் வி.கே.சனோஜ், கோட்டயத்தில் தேசாபிமானி தலைமை ஆசிரியர் புத்தலத்து தினேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.